முத்ரா கடனுதவி தொடரும்
'பிரதமர் முத்ரா யோஜனா' கீழ், அரசு 22.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 43 கோடி கடன்களை வழங்கியுள்ளது. இதையடுத்து, இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 'ஜன்தன்' கணக்குகள் வாயிலாக நேரடி பணப்பரிமாற்றத்தின் கீழ் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2.70 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டும் கடந்த, 10 ஆண்டுகளில், முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், 30 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.