உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  தொழிலதிபர் வெள்ளையன் காலமானார்

 தொழிலதிபர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழும முன்னாள் தலைவர் வெள்ளையன், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 72. கடந்த 125 ஆண்டு கால பாரம்பரியமிக்க முருகப்பா குழுமத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வெள்ளையன், அக்குழுமத்தில் மட்டுமின்றி நாட்டின் தொழில் துறையில் அனைவராலும் மதிக்கப்படும் நபராக திகழ்ந்தவர். பல தசாப்தங்களாக முருகப்பா குழுமத்தை சிறப்பாக முன்னேற்றப் பாதையில் வழி நடத்தியவர். கோரமண்டல் இன்டர்நேஷனல், இ.ஐ.டி., பாரி உட்பட பல நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்தில் பங்கேற்றவர் வெள்ளையன். கொனோரியா கெமிக்கல்ஸ், எக்சிம் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகியவற்றிலும் அவரது அனுபவம் பயன்பட்டது. கிட்டத்தட்ட 90,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முருகப்பா குழுமத்தை தாண்டி, இந்திய தொழில் துறை அமைப்புகளிலும் கணிசமாக பங்காற்றியவர். சதர்ன் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ், பெர்டிலைசர் அசோசியேஷன் ஆப் இந்தியா, சுகர் மில்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றில் வெள்ளையன் திறம்பட செயல்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ