மேலும் செய்திகள்
ஜூலையில் முக்கிய துறைகள் வளர்ச்சி சரிவு
21-Aug-2025
புதுடில்லி; நம் நாட்டின் நிறுவனங்கள் வருவாய் வளர்ச்சி, கடந்த ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவாக, 3.4 0 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் சேவை துறையில் பட்டியலிடப்பட்ட 3,000 நிறுவனங்களின் செயல்திறனை வைத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, கடந்த 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 5.10 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.80 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது 3.40 சதவீதமாக சரிந்துள்ளது. ஆய்வில், மாதிரிக்கு இடம் பெற்ற நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 5.10 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது 2.80 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் வருவாய் வளர்ச்சி, 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.70 சதவீதமாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.80 சதவீதமாக சரிந்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், உரத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணம். சேவை துறையின் வளர்ச்சி கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், 11.30 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், அது 5.80 சதவீதமாக குறைந்துள்ளது. செலவின வளர்ச்சியும் கடந்த ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவாக 2.40 சதவீதமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி.,யில் செய்யப்படவுள்ள மாற்றங்களால், அடுத்த காலாண்டில் மக்களின் தேவை அதிகரித்து, நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி உயரக்கூடும் என்று கருதப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
21-Aug-2025