உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.18,000 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.18,000 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடில்லி:இந்திய பங்கு சந்தை முதலீட்டில் இருந்து அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் இம்மாதம் 8ம் தேதி வரை, 17,924 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக, நடப்பாண்டில் இதுவரை அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் திரும்ப பெற்ற மொத்த தொகை, 1.13 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன. அமெரிக்கா -  இந்தியா வர்த்தக பதற்றம், வருவாய் ஏமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் பலவீனமடைதல் உள்ளிட்ட காரணங்களே, இந்த வெளி யேற்றத்துக்கு காரண மாக கூறப்படுகிறது. கடந்த ஜூலையில், அன்னிய முதலீட்டாளர் கள் திரும்ப பெற்ற முதலீட்டு நிகரத் தொகை 17,741 கோடி ரூபாயாக இருந் தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி