உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 300 சீன பொறியாளர்களை திருப்பி அழைத்த பாக்ஸ்கான்

300 சீன பொறியாளர்களை திருப்பி அழைத்த பாக்ஸ்கான்

பாக்ஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'யுஷான் டெக்னாலஜி' தன் இந்திய பிரிவில் இருந்து, கிட்டத்தட்ட 300 சீன பொறியாளர்களை திருப்பி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில மாதங்களில், இந்தியாவில் இருந்து சீன பொறியாளர்கள் திரும்பிச் செல்வது, இது இரண்டாவது முறை. இவர்கள் அனைவரும், தமிழகத்தில் யுஷான் நிறுவனம் அமைத்து வரும் டிஸ்ப்ளே மாட்யூல் அசெம்பிளி ஆலையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலை 13,180 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஐபோன் 17 அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், சீன பொறியாளர்கள் நாடு திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை