உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / என்.எல்.சி.,யில் இறுதி கட்டத்தில் பசுமை ஹைட்ரஜன்

என்.எல்.சி.,யில் இறுதி கட்டத்தில் பசுமை ஹைட்ரஜன்

நெய்வேலி:பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கு தேவையான முக்கிய கருவியான எலக்ட்ரோலைசர்கள் வாங்குவதற்கான இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக என்.எல்.சி., தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தின் நெய்வேலியில் 4 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான அடுத்தக்கட்டத்தை எட்டி உள்ளோம். தற்போது எலக்ட்ரோலைசர்ஸ் கொள்முதல் செய்வதற்கான கட்டத்தை அடைந்து உ ள்ளோம். இந்த ஆலை, நாளொன்றுக்கு 300 கிலோ, 99.999 தூய்மையான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தில் என்.எல்.சி., முன்னோடி நிறுவனமாகத் திகழும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நெய்வேலி, செப். 6-பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கு தேவையான முக்கிய கருவியான எலக்ட்ரோலைசர்கள் வாங்குவதற்கான இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக என்.எல்.சி., தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தின் நெய்வேலியில் 4 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான அடுத்தக்கட்டத்தை எட்டி உள்ளோம். தற்போது எலக்ட்ரோலைசர்ஸ் கொள்முதல் செய்வதற்கான கட்டத்தை அடைந்து உ ள்ளோம். இந்த ஆலை, நாளொன்றுக்கு 300 கிலோ, 99.999 துாய்மையான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தில் என்.எல்.சி., முன்னோடி நிறுவனமாகத் திகழும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை