உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மேம்பட்ட உற்பத்தி மன்றம் துவக்கம்

மேம்பட்ட உற்பத்தி மன்றம் துவக்கம்

சென்னை : தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், 'ஸ்டார்ட் அப் டி.என்' எனப்படும் தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் செயல்படுகிறது. இது, 'இண்ட்ஸ்ட்ரி 4.0' எனப்படும், தொழில் துறை 4.0 மற்றும் மேம்பட்ட உற்பத்தி மன்றத்தை துவக்கியுள்ளது.இதை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இந்த மன்றம், தொழில் துறையில் ஏற்படும் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும்.இந்நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப் டி.என்., 'பூட்ஸ்டிராப்பர்ஸ் ரிசர்ச் கவுன்சில்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, மெய்நிகர் வளர் மையங்கள் மற்றும் அறிவுசார் காப்புரிமை பெற தேவையான உதவிகளை அந்நிறுவனம் வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்