மேலும் செய்திகள்
சேவைகள் துறை வளர்ச்சி ஆகஸ்டில் அதிகரிப்பு
05-Sep-2024
புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு, செப்டம்பரில் சரிந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 57.50 புள்ளிகளாக இருந்த தயாரிப்பு துறை நிறுவனங்களின் வளர்ச்சி, ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு, செப்டம்பரில் 56.50 புள்ளிகளாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்துக்கு பின், இதுவே குறைந்தபட்ச வளர்ச்சியாகும். எனினும், 50 புள்ளிகளுக்கு கூடுதலாக பதிவாகியுள்ளதால், இது சரிவைக் குறிக்காது. வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதையே இது உணர்த்துகிறது. உற்பத்தி, விற்பனை மெதுவான வேகத்தில் அதிகரித்ததும்; புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் சரிந்ததுமே வளர்ச்சி குறைய காரணமாக அமைந்தது. உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர் செலவுகள் அதிகரிப்பு மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக, நிறுவனங்கள் விற்பனை விலையை சற்றே உயர்த்தின. அதே நேரத்தில், பணியமர்த்தல்கள் குறைந்தன. குறிப்பாக, பகுதி நேர மற்றும் தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
05-Sep-2024