சீரான வளர்ச்சியில் சேவை துறை பணியமர்த்தல்கள் புதிய உச்சம்
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த மாதம் பெரிய மாற்றம் ஏதும் இன்றி, வளர்ச்சிப் பாதையிலேயே தொடர்ந்ததாக எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணியமர்த்தல்கள் இதுவரை இல்லாத உச்சம் தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி., வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, மாதந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா நிறுவனம் இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.