உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி

துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி

துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய வளர்ச்சி திட்டங்கள் குறித்து, ஆணையத் தலைவர் சுசந்த்குமார் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.வளர்ச்சி திட்டங்கள் 306 மீட்டர் நீளமும்; 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக, மூன்றாவது வடக்கு சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி, வரும் பிப்ரவரி மாதம் முடிவடையும் 100 முதல் 120 டன் திறன் கொண்டு நகரும் பளு துாக்கி இயந்திரங்கள், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிறுவப்பட்டு, இடைக்கால செயல்பாடுகள் துவக்கப்படும்  ஆண்டுக்கு 70 லட்சம் டன் சரக்கு வெளியேற்றத்திற்கு வசதியாக, மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தை இயந்திரமயமாக்கும் திட்டம் 2026 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது கப்பல் வரும் நுழைவாயிலை, 152.40 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி, 15.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. பணி முடிந்ததும், 49 மீட்டர் அகலமும், 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும் இரண்டாவது வடக்கு சரக்கு தளத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக, ஒரு நாளில் கூடுதலாக 25,000 டன் சரக்குகளை கையாளும் நோக்கத்துடன், 100 டன் திறன் கொண்ட நகரும் பளு துாக்கி இயந்திரம் வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் நிறுவப்பட உள்ளது காற்றாலை இறகுகள் மற்றும் உபகரணங்களை கையாளுவதற்காக, 470 மீட்டர் நீளம் கொண்ட 30 ஹெக்டேர் சேமிப்பு பகுதியுடன் கூடிய ஒரு பிரத்தியேகமான முனையத்தை நிறுவ, துறைமுகம் திட்டமிட்டுள்ளது  501 ஏக்கர் நிலப்பரப்பை நான்கு நிறுவனங்களுக்கு ஒதுக்கி, 41,860 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை ஹைட்ரஜன், அமோனியா உற்பத்தி மற்றும் சேமிக்கும் வசதிகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டுஉள்ளது பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியாவை, ஆண்டுக்கு 20 லட்சம் டன் அளவுக்கு கையாளு வதற்கு தேவையான சரக்கு தள வசதி மற்றும் உள்கட்டமைப்பை நிறுவும் பணியில் துறைமுகம் முழு கவனம் செலுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை