உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பேங்க் நிப்டி 3 நாட்களாக சரிவு

 பேங்க் நிப்டி 3 நாட்களாக சரிவு

தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்துள்ள 'பேங்க் நிப்டி' குறியீடு, நேற்று 57,000க்கு கீழே இறங்கி 56,777 புள்ளிகளில் நிலைபெற்றது. 'ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி., பேங்க்' ஆகிய முன்னணி வங்கி துறை பங்குகள் 1 சதவீதத்துக்கு மேல் இறங்கியுள்ளன. டெக்னிக்கலாக பேங்க் நிப்டி முக்கிய ஆதரவு நிலையில் முடிவடைந்துள்ளது. மேலும், 20 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (டி.எம்.ஏ.,) கீழே இறங்கியுள்ளது. அடுத்தகட்டமாக, 56,500 - 56,200 லெவல்கள் முக்கிய ஆதரவு பகுதியாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காரணங்கள்  கடன் பத்திரங்களின் சரிவால், வங்கிகளின் பத்திர வர்த்தக வருமானம் பாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு  கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சம். பங்குகள் சரிவு (%) ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் -1.97 ஆக்ஸிஸ் பேங்க் -1.67 யூனியன் பேங்க் ஆப் இந்தியா -1.52 ஹெச்.டி.எப்.சி., பேங்க் -1.06 (ஆதாரம்: என்.எஸ்.இ.,)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்