ரூ.3,662 கோடி ஈவுத்தொகை வழங்கியது எல்.ஐ.சி.,
புதுடில்லி:மத்திய அரசுக்கு, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., ஈவுத் தொகையாக 3,662 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. எல்.ஐ.சி.,யின் மிகப்பெரிய பங்குதாரராக மத்திய அரசு உள்ளது. கடந்த நிதியாண்டில், பங்கு ஒன்றுக்கு ஆறு ரூபாய் வீதம், 6,103 கோடி ரூபாயை ஈவுத் தொகையாக வழங்க வேண்டியிருந்தது. கடந்த மார்ச் 1ம் தேதி, இடைக்கால ஈவுத்தொகையாக 2,441 கோடி ரூபாயை எல்.ஐ.சி., அரசு கருவூலத்தில் செலுத்தியது. இதையடுத்து, தற்போது இரண்டாவது தவணையாக 3,662 கோடி ரூபாய்க்கான காசோலையை, எல்.ஐ.சி.,யின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சித்தார் மொஹந்தி தலைமையிலான குழுவினர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.