உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சிறிய ஏற்றம் கண்ட சந்தை

சிறிய ஏற்றம் கண்ட சந்தை

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சற்று உயர்வுடன் நிறைவடைந்தன.• வர்த்தகத்தின் ஆரம்பத்தில் குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. அதன் பிறகு, ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தமாகின. நேற்றைய வர்த்தக நேரத்தின்போது, நிப்டி 0.60 சதவீதம் அதிகரித்து, 25,134 புள்ளிகள்; சென்செக்ஸ் 0.65 சதவீதம் அதிகரித்து 82,002.85 புள்ளிகள் வரை உயர்வு கண்டன. • நிப்டி குறியீட்டில், வங்கிகள், நிதி நிறுவனங்கள், உலோகம் தவிர்த்து பெரும்பாலான துறை பங்குகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் மதிப்பு 1.84 சதவீதம் வீழ்ச்சி கண்டன.• டி.சி.எஸ்., நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள், அமெரிக்க பணவீக்கம் தொடர்பான தரவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். இதன் தாக்கம், இன்றைய வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று,-- ------------ கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.87 சதவீதம் அதிகரித்து, 77.85 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து, 83.97 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை கோட்டக் வங்கி ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் எச்.டி.எப்.சி.,வங்கி பெல் இண்டஸ்இண்ட் வங்கிஅதிக இறக்கம் கண்டவை சிப்லா டெக் மஹிந்திரா டிரென்ட் சன் பார்மா இன்போசிஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி