ரூ.85,790 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
புதுடில்லி:சீன சந்தையின் ஊக்க நடவடிக்கைகள் மற்றும் கவர்ச்சிகரமான பங்கு மதிப்பீடுகள் மற்றும் உள்நாட்டு பங்குகளின் உயர்ந்த விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களினால் அன்னிய முதலீட்டாளர்கள், இம்மாதம் இந்திய சந்தைகளில் தொடர்ந்து தங்கள் பங்கு முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். தரவுகளின்படி, இம்மாதம் 1 முதல் 25ம் தேதி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் 85,790 ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுஉள்ளனர்.கடந்த 2020 மார்ச்சில், அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை 61,973 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு பின், நடப்பு அக்டோபர் மாதம் மிகவும் மோசமானதாக மாறி உள்ளது.