உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஜூலை - செப்., ஸ்மார்ட்போன் சந்தை 3% வளர்ச்சி

ஜூலை - செப்., ஸ்மார்ட்போன் சந்தை 3% வளர்ச்சி

புதுடில்லி: கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக 'ஓம்டியா' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த வளர்ச்சி விற்பனையை குறிக்காது; மாறாக தொழிற்சாலைகளில் இருந்து விற்பனையகங்களுக்கு அனுப்பப் பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையை குறிக்கும். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: செப்டம்பர் காலாண்டில் தொழிற்சாலைகளில் இருந்து விற்பனையகங்களுக்கு 4.84 கோடி ஸ்மார்ட்போன்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது கடந்தாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகம். வினியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை வர்த்தகர்களுக்கு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விற்பனை சார்ந்த ஊக்கத்தொகை அறிவித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதுதவிர கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதும் ஒரு காரணம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனை கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 10 சதவீத சந்தை பங்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் டாப் 5 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 17 மாடல் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு நுகர்வோர் மத்தியில் உள்ள வரவேற்பு, பண்டிகை கால சலுகை மற்றும் பரவலாக கிடைக்கும் தன்மை ஆகியவை ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !