உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் : நிடி ஆயோக் அமைப்பில் மாற்றம்

சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் : நிடி ஆயோக் அமைப்பில் மாற்றம்

புதுடில்லி: நிடி ஆயோக் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு சிறப்பு அழைப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுநாடு முழுதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது.பிரதமர் தலைமையில் அந்தக்குழு வில் அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில் இந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் படி ஜே.பி.நட்டா, சிவராஜ்சிங் சவுகான் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடு, குமாரசாமி உள்ளிட்ட மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றபடி தலைவர், துணை தலைவர் பதவிகளில் மாற்றமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை