உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் அமைச்சர் மருமகனுக்காக புதிய பணியிடம் உருவாக்குவதா? : எதிர்கட்சிகள் கண்டனம்

கர்நாடகாவில் அமைச்சர் மருமகனுக்காக புதிய பணியிடம் உருவாக்குவதா? : எதிர்கட்சிகள் கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சரின் மருமகனுக்காக சட்டசபை செயலர்-2 என்ற புதிய பணியிடத்தை உருவாக்குவதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.கர்நாடகா காங்கிரஸ் முதல்வராக சித்தராமையா உள்ளார். இவரது அமைச்சரவையில் சிறு, குறு தொழில்துறை அமைச்சராக (தனிப்பொறுப்பு ) கே.எச். முனியப்பா உள்ளார். இவரது மருமகன் சசிதரன் என்பவருக்கு சட்டசபை செயலாளர் பதவி வழங்குவதற்காக சட்டசபை செயலர்-2 என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி அதில் அவரை பணி நியமனம் செய்து வைக்க சித்தராமையா அரசு நடவடிக்கை எடுத்து இது தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.சித்தராமையா அரசின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே செயலர் பதவி இருக்கும் போது அமைச்சரின் மருமகன் என்பதால் கூடுதலாக செயலர்-2 என்ற புதிய பணியிடத்தை உருவாக்குவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S.V.Srinivasan
ஜூலை 23, 2024 11:05

தமிழ் நாட்டிலும் இந்த கூத்து நடக்குதே.


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 20:55

ஏற்கனவே டி கே சிவகுமார் எனும் முதல்வர் 2 உள்ளாரே .


Barakat Ali
ஜூலை 22, 2024 20:44

மக்களைச் சுரண்டும் விதத்தில் எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் ....


நிக்கோல்தாம்சன்
ஜூலை 22, 2024 20:17

கேவலமான நிலையில் காங்கிரஸ் ஆட்சி


Bhaskaran
ஜூலை 22, 2024 20:05

நம்ம ஊரில பிள்ளைக்கு துணை முதல்வரே தரபோறாங்க


V RAMASWAMY
ஜூலை 22, 2024 19:22

இதற்காக ஆகும் கூடுதல் செலவை எதாவது ஒரு அதிக வரி போட்டு ஈடு கட்டி விடலாமென்ற யோசனையோ என்னவோ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை