உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரொம்ப சூப்பருங்க... மத்திய அரசை பாராட்டிய தி.மு.க., எம்.பி., கனிமொழி

ரொம்ப சூப்பருங்க... மத்திய அரசை பாராட்டிய தி.மு.க., எம்.பி., கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபாவில் ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராட்டினர். ரயில்வே வாரியம் சுதந்திரமாக செயல்படும் விதமான சட்டதிருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சூலே, ரயில்வே துறைக்கு பாராட்டு தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ogc8x88c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது:மஹாராஷ்டிராவில் ரயில்வே நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள ஏராளமான ரயில்நிலையங்களில் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தவுந்த் ரயில் நிறுத்தத்தில் முன்பு 80 ரயில்கள் நின்று செல்லும். தற்போது, 40 ரயில்கள் தான் நிற்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பொருளாதாரம் பாதிக்கிறது. இதற்கு மாற்று வழியை கண்டறிந்து தீர்வு காண வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தி.மு.க., எம்.பி., கனிமொழியும் மத்திய அரசை பாராட்டினார். 'ரயில் நிலையங்கள் மட்டுமல்லாமல், ரயில்களும் சுகாதாரமாக இருக்கின்றன,' என்றார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களின் இந்த பாராட்டுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள ரயில்வே வாரியம்,' இதுபோன்ற வார்த்தைகள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான உந்துதலை கொடுக்கும்,' எனக் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

SASTHAMANI VENKATACHALAM
டிச 13, 2024 17:15

ஆமாம்... கடந்த பத்து ஆண்டுகளில் 31,000 கி.மீ. ரயில் பாதை அமைத்தோம் என்று வைஷ்ணவ் அவர்கள் மார் தட்டிக்கொள்கிறாரே அது உண்மையான்னு பாத்துச் சொல்லுங்க ஐயா.


hariharan
டிச 13, 2024 10:47

அந்தமானில் ரயில்பாதை என்ன ஆயிற்று?


Rpalni
டிச 13, 2024 08:22

2 ஜி ஊழல் ராணி கட்டம் கட்டப் படுவார்


சாண்டில்யன்
டிச 13, 2024 00:43

திருக்குவளை வழியாக ரயில் பாதை அமைப்பது பல ஆண்டுகளாக பாதியில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது அதைப்பற்றி யாருமே கேட்பதில்லை போங்கடா என்று விட்டு விட்டார்கள் போல இந்த லைன் வந்தால் எட்டுக்குடி சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு போய்வரலாம்


ghee
டிச 13, 2024 06:47

பாரீஸ் சந்துல இருந்து திருக்குவளை வரை ட்ரெயின் உட முடியுமா பாருங்க


sridhar
டிச 16, 2024 14:22

திருக்குவளை அருகில் போடப்படும் ரயில் தண்டவாளங்கள் எல்லாம் திடீர் திடீர் என்று காணாமல் போகிறதாம், பேய் நடமாட்டம் இருக்கிறதாம், பேய் திருடுகிறதாம்.


Jay
டிச 12, 2024 21:16

யார் பாராட்டினாலும் பாராவிட்டாலும் ரயில் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் மிக திறமையானவர். மீடியாக்களில் பொதுவாக அவர் வருவதில்லை.


தமிழன்
டிச 12, 2024 20:29

போதை வழக்கு வராமல் இருக்க என்ன செய்வது


Barakat Ali
டிச 12, 2024 19:51

மாநில அரசியல் சாய்ஸ் இல்லை .... உனக்கு தேசிய அரசியல் என்றுதான் கட்டு பிரித்துக் கொடுத்துவிட்டார் ..... அப்படித்தான் ஒரு உணர்வை ஊட்டி வளர்த்தார் ..... இனிமேல் பாஜக தவிர்க்க முடியாத சக்தி என்பதை அம்மையார் புரிந்து வைத்திருக்கலாம் .....


Barakat Ali
டிச 12, 2024 19:49

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ₹1,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததை ஐ-டி அதிகாரிகள் கண்டுபிடித்தனர் ரெய்டு ஆறாவது நாளைக்கடந்தது .......... அந்த எம் பி அம்மையாரின் பின்னால் அமர்ந்துள்ளார் ...... ஆகவே ஒன்றியத்தைப் பாராட்டிய அம்மையாரையும் பாராட்டணும் ......


Ramesh Sargam
டிச 12, 2024 19:11

எனக்கு என்னமோ வாழ்த்துவதாக தெரியவில்லை. ஒருவேளை வஞ்சி புகழ்ச்சியாக இருக்குமோ....


Balasubramanian
டிச 12, 2024 18:43

பார்த்திபன் ஸ்டைலில் போட்டு வாங்கிடப் போறாங்க! - இவர்கள் பாலம் கட்டும் செலவை ஏற்கும் படி அடுத்த கோரிக்கை வரலாம்! ஜாக்கிரதை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை