உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு இயந்திரம் குறித்து கவலை வேண்டாம்

ஓட்டு இயந்திரம் குறித்து கவலை வேண்டாம்

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் முற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் 100 சதவீதம் பாதுகாப்பானது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. பலகட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அனைத்து கட்டத்திலும் உடன் இருந்துள்ளனர். எல்லாம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாகவே நடக்கின்றன. எனவே, மக்கள் அளித்த ஓட்டுகள் குறித்து கவலை வேண்டாம். அவை மிகவும் பத்திரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sampath Kumar
ஏப் 20, 2024 11:06

நீங்க சொன்ன பிறகு தான் ரொம்ப கவலை


K.n. Dhasarathan
ஏப் 20, 2024 10:51

மக்கள் கவலைப்பட வேண்டாம், ஒட்டு மெஷின் பற்றி, ஏன் எனில் நாங்களும் கவலைப்படவில்லை, நாடு முழுதும் பல இடங்களில் ஒட்டுக்கல் இல்லை, பல பல இடங்களில் குழப்பம் , புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, ஆனால் நாங்கள் எதற்கும் கவலைப்பட வில்லை, மக்களே நீங்களும் கவலைப்பட வேண்டாம் ஆர் கே நகர் தொகுதியில் ஆதாரத்தோடு புகார் கொடுத்துமே நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, இனிமேலா எடுக்க போகிறோம் ? உலகத்திலே வேடிக்கையாக நடந்த கேலி கூத்து


Nagercoil Suresh
ஏப் 20, 2024 09:06

"மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சதவீதம் பாதுகாப்பானது" தலையை பிடித்தால் வாலை பிடிப்பதும் வாலை பிடித்தால் தலையை பிடிப்பதும் இது தானோ, கேட்பது ஒரே கேள்வி, போடும் ஓட்டுக்கு ஏன் பிரிண்டவுட் எடுத்து ஒப்பித்து பார்க்கக்கூடாது, வைத்திருக்கும் விவிபேடு இயந்திரங்களை வைத்து ஊறுகாய் போடுவதற்கா? கிராமங்களில் கூறுவதுபோல நீங்களும் உங்கள் கடமை உணர்ச்சிகளும்


Kasimani Baskaran
ஏப் 20, 2024 08:08

ஒரு முறை தட்டினால் இரண்டு ஓட்டு என்று ஒரு பீதியை கிளப்பி இன்புற்றவர்கள் நல்ல வேளையாக ஒருவரும் தற்கொலை செய்து


VENKATASUBRAMANIAN
ஏப் 20, 2024 07:58

திருட்டு கும்பல் தாங்கள் ஜெயித்தால் பேசவே மாட்டார்கள் இப்போது பாஜக ஜெயிப்பது உறுதியாகிவிட்டது அதனால் இப்படி கதை கட்டி விடுவார்கள் இதற்காக ஊடகங்களில் சிலர் பத்திரிக்கையாளர் போர்வையில் உள்ளனர் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்


Senthoora
ஏப் 20, 2024 07:19

இதை சொல்ல உங்களுக்கு எவ்வளவு கிடைத்தது


GMM
ஏப் 20, 2024 06:48

மின்னணு ஓட்டு எந்திரம் EVM பாதுகாப்பானது விரைவானது கட்சிகள் தோல்விக்கு காரணம் கூற பயன்படுத்தி வருகின்றனர் ECI அனைவரும் வாக்களிக்க வசதி செய்து தர வேண்டும் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் அட்டை புதுப்பிக்க, எந்த தொகுதியிலும் வாக்களிக்க அனுமதி வேண்டும் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டும் தகுதி வந்தவுடன் சேர்த்து, வாக்காளர் இறந்த பிறகு ஒரு மாதத்தில் வாக்காளர் பெயர் நீக்க வேண்டும் மாநில நிர்வாகத்திடம், வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க பணி கொடுக்க கூடாது தேர்தல் ஆணையம் விசாரித்து, அரசு ஆவணத்தின் அடிப்படையில் நேரடியாக வழங்க வேண்டும்


மேலும் செய்திகள்