வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கோல்டு வின்னர் 113 ரூபாய் இருந்தது ஒரு லிட்டர் எப்போது 125 ரூபாய். நீங்கள் வரி போட்டுவிட்டு ஏற்றக்கூடாது என்றால் வியாபாரிகள் எப்படி ஒப்புக் கொள்வார்கள் அவர்கள் கையை விட்டு கட்டணமா மக்கள் தலையில் தான் விழுகிறது. நிர்வாகம் தெரியாத மத்திய அரசு .
பண்டிகைக் காலம் வந்து விட்டதால் எண்ணெய்க்கு கிராக்கி அதிகம். சூழ்நிலையைப் பயன்படுத்தி விலையைக் கூட்டுவது தவறு . அரசு எவ்வளவோ ஊக்கமும் மானியமும் அளித்தும் விவசாயிகள் எண்ணெய் வித்துக்களைப் பயிரிடத் தயங்கக் காரணம் எண்ணெய் இறக்குமதிதான். இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி ஏழை வாடிக்கையாளர்கள் தலையில்தான் விழும். அவர்கள் விவசாயிகளின் நலன் கருதி விலையுயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்டுப்படியாகாதவர்கள் அரசு ரேஷனில் வழங்கும் பாமாயிலைப் பயன்படுத்தலாம்.
அதென்னங்க எரிபொருள் கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு ரூல் மத்தவங்களுக்கு ஒரு ரூல்... எரிபொருள் துறைக்கு ஒரு அமைச்சர் வேறே... இதெல்லாம் கண்துடைப்பு.. முக்கிய உணவு எண்ணெய் நிறுவனமான அடேஷினிக்கு ஒரு சம்மிக்ஞய் என்றே இதை பார்க்க முடியுது... மக்களுக்கு வழக்கம் போல பிம்பிளிக்கி பிளாக்கிதான்...
சமையல் எண்ணெய் விலையை சுத்திகரிப்பு நிறுவனங்கள் உயர்த்தக்கூடாது என கூறுவது பாஜக அரசின் மங்காத்தா ஆட்டத்தையே காட்டுகிறது என மக்கள் கூறுகின்றனர்
ஒரு லிட்ரேருக்கு 13 ரூ விலை ஏற்றி 1 வாரம் ஆகுது . மத்திய அரசால் செய்திதான் வெளியிட முடியும் . வேறு ஒன்றும் செய்ய முடியாது.
உடல் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் பொருள் தான் எண்ணெய். அதன் விலை அதிகரித்தால் மக்கள் கம்மியாக உபயோகப்படுத்துவார்கள். இறக்குமதி வரியை அதிகரிப்பது நல்லது. இதனால் எந்த கேடும் இல்லை. அரசு விலை கட்டுப்பாடுகளை தனியாரிடம் விதிக்க கூடாது. இது போன்ற கம்முனிச கொள்கைகள் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.
மத்திய அரசு மட்டுமே உருவுவதற்கு அதிகாரம் கொண்டது. இப்பிடியே போனால், அதானிகள் நடத்தும் ஆயில் மில்களை மூடிட்டு போக வேண்டியதுதான்.