உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலா பயணியர் வராததற்கு இட்லி - சாம்பார் தான் காரணம் கோவா எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

சுற்றுலா பயணியர் வராததற்கு இட்லி - சாம்பார் தான் காரணம் கோவா எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

பணஜி, ''கோவாவில் உள்ள கடற்கரை குடில்களில் இட்லி - சாம்பார் விற்கப்படுவதே, சர்வதேச சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைவுக்கு காரணம்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோ குற்றஞ்சாட்டினார்.கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடற்கரை மாநிலமான கோவா, வருவாயில் சுற்றுலா துறையை பெரிதும் நம்பி இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xaqgbiyu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சில ஆண்டுகளாக, கோவாவுக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், கலங்குட்டி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த இரு ஆண்டுகளாக கோவாவுக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு அரசை மட்டும் குறை கூறக்கூடாது. கடற்கரை குடில்களில், பெங்களூரைச் சேர்ந்த நபர்கள், 'வட பாவ்' விற்கின்றனர். சிலர், இட்லி - சாம்பார் விற்கின்றனர். மேற்கத்திய உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறைந்து விட்டது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க, அனைத்து தரப்பினரும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.ரஷ்யா - உக்ரைன் போரும், சுற்றுலா பயணியர் வருகை குறைந்ததற்கு ஒரு காரணம். சில ஆண்டுகளுக்கு முன் வரை, ரஷ்யாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் கோவாவுக்கு வந்தனர். இப்போது அவர்கள் வருவது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Jeyapaul Thanasingh
மார் 03, 2025 18:48

பிஜேபி ஆட்சிதான் காரணம் கோவா வின் வெளி நாட்டு கலாச்சாரம் பிஜேபி ஆட்சி யில் சிதைக்க படுவிட்டது


Venkatesh
மார் 04, 2025 20:44

விஷயமே முழுவதும் தெரியாது ...... ஆனாலும் கோபாலபுரம் விசுவாசத்தை காட்டுபவர்களில் இதுவும் ஒன்று


Narasimman Lakshminarasimhan
மார் 01, 2025 01:35

ராத்திரி 8 மணியிலிருந்து பானாஜி பஸ் ஸ்டாண்டில் இருந்து பக்கத்துக்கு ஊருக்கு பஸ் இருக்கா ? எத்தனை கவர்மெண்ட் பஸ் ஓடுது ? டாக்ஸி ஆட்டோ விலையில் ஏதாவது கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கா ? மேற்கத்திய உணவு திங்க இங்க ஏன்டா வரணும்? கோவால மேற்கத்திய உணவு விக்கறது இல்லையா ? இட்லி சாம்பார் திங்க நினைக்கிறவன் தின்னுட்டு போறான் ? வெளி நாட்டுக்காரன் சாம்பாரை plate ல ஊத்தி உறிஞ்சி குடிக்கிறான் . உனக்கு பிடிக்கலைன்னா ?


RAINBOW
பிப் 28, 2025 20:51

Research for the reasons why so many tourists are coming to Puducherry. There is nothing as tourist attraction in Puducherry. Yet people are thronging.


Veera chandra moorthy K
பிப் 28, 2025 17:11

தங்கும் விடுதிகள் ,டாக்சிகள், சாப்பாடு . அனைத்தும் கூடுதல் விலை, பின் எப்படி ஒரு தடவைக்கு மேல் வர முடியும்


Ram pollachi
பிப் 28, 2025 14:37

நம் ஊர் டீ கடை மாதிரி எங்கு பார்த்தாலும் முந்திரி சாராய கடைகள். மீன் கடை, இறைச்சி கடை உணவகம் எங்கு பார்த்தாலும் பெண்களே. வாஸ்கோடகாமாவில் இறங்கி இடது புறம் பார்த்தால் மிகப்பெரிய அந்தப்புரம் இருந்த இடமே தெரியாது. சுற்றி திரிந்தால் தயவு தாட்சண்யம் காட்டாத காவல்துறையின் தர்ம அடி உறுதி. மனோகர் பாரிகார் புண்ணியத்தில் உள்ளூர் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள். கோவாவில் கிடைக்காத அது நம்ம ஊரில் கிடைக்குது பிறகு எதற்கு அங்கு போக வேண்டும்.


KRISHNAN R
பிப் 28, 2025 13:21

அதிக டாக்ஸி வாடகை ஒரு காரணம் என்று தெரிகிறது


ஆரூர் ரங்
பிப் 28, 2025 11:44

பெரும்பாலான கோவா கிறிஸ்தவ அரசியல்வாதிகள் இன்னும் பழைய போர்த்துக்கீசிய கலாச்சார மனப்பான்மையிலேயே உள்ளனர். உடலுழைப்பு வேலைகள் அனைத்திலும் வெளி மாநில ஆட்கள்தான் உள்ளனர். உலகம் முழுவதுமே உக்ரேன் இஸ்ரேல் போர்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாற்றுத்தொழில்களை வளர்க்க முயற்சிப்பதற்கு பதில் நொண்டி சாக்கு கூறுகிறார் எம்எல்ஏ.


KRISHNAN R
பிப் 28, 2025 11:26

அப்போ மற்ற உநவுகள்...இல்லையா


பால்கோவா
பிப் 28, 2025 10:11

தப்பு. கோவாவில் பலான தொழிலெல்லாம் குறைஞ்சு போச்சு. அதனால் வெளிநாட்டவருக்கும், நம்ம நாட்டவருக்கும் ஆர்வமில்லை.


கோமாளி
பிப் 28, 2025 07:58

கோவாவை மாநிலங்களுடன் இணைக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை