உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி பங்களா: ஆட்சி மாறியதும் வசமாக சிக்கியது!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி பங்களா: ஆட்சி மாறியதும் வசமாக சிக்கியது!

அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா கட்டி உள்ளார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டி வசமாக சிக்கி உள்ளார்.சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஆட்சி மாறியதும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரச்னைகளும் வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஜூன் 15ம் தேதி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ரூ. 500 கோடி மதிப்பில் ஒரு அரண்மனை போன்ற பங்களா கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவை தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ., காந்தா ஸ்ரீனிவாஸ் உள்ளூர் தலைவர்களுடன் பார்வையிட்டார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.

பங்களாவில் இருக்கும் வசதிகள்!

கண்ணாடிகள், கிரானைட்கள் என மிக பிரம்மாண்டமாக பங்களா கட்டப்பட்டு உள்ளது. பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். மொத்தம் ரூ.500 கோடி வரை செலவு செய்து ஜெகன்மோகன் ரெட்டி பங்களாவை கட்டி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

என்றும் இந்தியன்
ஜூன் 18, 2024 17:31

ஸ்டாலின் ஆட்சி கலையட்டும் பிறகு பாருங்கள் இதே மாதிரிதான் நிறைய செய்திகள் வரும்


K.Muthuraj
ஜூன் 18, 2024 14:14

எல்லா மாநில கட்சி ஆட்சியாளர்களும் இதை மறைக்க தான் மோடி ஒழிக கோஷம் போடுகின்றனர்.


தமிழ்வேள்
ஜூன் 18, 2024 13:07

ஆந்திர மாநிலத்துக்கான கவர்னர் மாளிகையாக மாற்றிவிடலாம் .... சொத்து பறிமுதல் செய்யப்பட்டது தண்டனையாகவும் , கவர்னர் மாளிகைக்கு தனியாக செலவு இல்லாமலும் இருக்கும் ..மாளிகையையும் இடிக்க தேவையில்லை .......கிரிப்டோ ஜெகன் ரெட்டி பார்க்கும் போதெல்லாம் பொருமி பொருமியே ஒரு வழி ஆகிவிடுவான் ....


naranam
ஜூன் 18, 2024 00:50

ஆடிய ஆட் டமென்ன


S Parthasarathy
ஜூன் 17, 2024 21:55

எதற்கு இடிக்க வேண்டும். ஆடம்பர?ஹோட்டலாக மாற்றி அரசு கஜானாவுக்கு வருமானம் வர வழி செய்ய வேண்டும். முன்பு சந்திரபாபு நாயுடு கட்டிய முதல்வர் மாளிகையை ஜெகன் இடித்து தள்ளினார்.


sankaranarayanan
ஜூன் 17, 2024 21:04

நாட்டின் பிரதமர் வாழ்க்கையை கேளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் அட்டகாசத்தை மக்களே கவனியுங்கள் இப்படித்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் எதிரிக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் எவ்வளவு மக்கள் பணத்தை சுரண்ட முடியுமோ அவ்வளவையும் சுரண்டி நான்கு தலைமுறைகளுக்கு சொத்து சேமித்துவிட்டு மறைந்து விடுகிறார்கள் உச்ச நீதிமன்றமும் தெரிந்தும் தெரியாததுபோல் விட்டு விடுகிறது இப்படிப்பட்ட எதிர்கட்சிகளையே அறவோடு நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் மக்கள் பணத்தை மக்களுக்கே செலவிடவேண்டும்


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஜூன் 17, 2024 20:30

எது என்ன ஜுஜுபி நம்ம விடியல் கிட்ட போட்டி போட முடியுமா ?


Ramesh Sargam
ஜூன் 17, 2024 20:22

செய்தியை படித்தவுடன் என்னுடைய இருதயம் கொஞ்ச நேரம் நின்றுவிட்டது. பிறகு சுதாரித்துக்கொண்டேன். இதுபோன்ற ஊர் பணத்தை சுருட்டும் அரசியல்வாதிகளை மக்கள் கண்டுகொண்டு, தேர்தல் நேரத்தில் சரியாக அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். ஜெகன் சுருட்டியது மக்கள் பணம் மட்டும் அல்ல, அந்த திருப்பதி கோவில் பணத்தையும் கூட. இவர்கள் முடிவு மிக மிக கோரமாக இருக்கும்.


vaiko
ஜூன் 17, 2024 22:21

உனக்கு ரேணுகா சாமி அடைந்த தண்டனை போல் கிடைக்க திருப்பதி ஏழுமலையானை வேண்டி கொள்கின்றேன்.


திருட்டுத் தமிழன்
ஜூன் 17, 2024 19:59

தீமூகர்களின் பல லக்ஷம் கோடிகளுடன் ஒப்பிட்டால் இதெல்லாம் சின்ன தொகைதான்.... பரவாயில்லன்னு விடுங்க எங்களை பார்த்து...


Shunmugham Selavali
ஜூன் 17, 2024 19:42

மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்திருந்தால் இடிக்கவேண்டும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ