| ADDED : மார் 28, 2024 01:37 AM
புதுடில்லி, கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ், 66. இவரு க்கு சமீபத்தில் மூளை ஓட்டில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், டில்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கடந்த 17ம் தேதி அவசர அறுவை சிகிச்சை நடந்தது. மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரி தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை முடித்தனர். ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தவர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, நலமுடன் வீடு திரும்பினார்.