வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நாட்டின் வளர்ச்சியில் நிச்சயம் மாற்றம், நவீனம் என்பது வரவேற்க கூடியதே !
நான் நேற்று பெங்களூர் இருந்து கோவை வரை வந்தே பாரத் இரயிலில் பயணம் செய்தேன், செய்தித்தாள், டீ, காபி, தின்பண்டம், தண்ணீர் பாட்டில், இரவு உணவுடன் ஐஸ்கிரீம், ஆகா என்ன ஒரு சுகம் இதில் பயணிக்கும் போது, நமக்கு விமானத்தில் பயணம் செய்த அனுபம் போன்று இருக்கும். காசுக்கு ஏற்ற பணியராம் என்று சொல்வார்கள். ஒரு குறையும் இல்லை, நன்றி இந்தியன் இரயில்வே துறைக்கு.
அதற்காக தானே ஒவ்வோர் தேர்தலிலும் வாக்கு செலுத்தாமல் தமிழன் இருக்கிறான். இனிமேலும் அப்படியே இருக்கும். வாக்கும் கிடையாது சலுகையும் கிடைக்காது. 2029, 2034, 2039 என்று வரும் 15 வருடங்களுக்கு இதையே தமிழன் செய்வான். அவர்களும் செய்வார்கள். இது மாறாது.
சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மிக கேவலமாக உள்ளன. அழுக்கு பிடித்த பெட்டிகள் துருப்பிடித்த பெட்டிகள் கழிவறைகளின் செயல்படாத குழாய்கள் சரியாக மூடமுடியாத ஜன்னல் கதவுகள் தண்ணீர் வராத கழிவறைகள் இவைகளுக்கெல்லாம் எப்போது விடிவு காலம் என்று தான் கேட்கிறோம். ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் செலவில் குறைந்தது 15 சாதாரண ரயில் பெட்டிகள் தயாரித்து துருப்பிடித்த பெட்டிகளை மாற்றலாமே. விரைவாக செல்ல வேண்டும் ஏசி வசதி வேண்டும் நெரிசல் இருக்கக் கூடாது என்று ஒரு சில ஆடம்பர வாதிகள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு வியர்வை வரக்கூடாது சட்டையில் அழுக்கப்படக்கூடாது கார் சும்மா இருக்கும்போதும் ஏசியை இயக்க விட்டு உட்கார்ந்திருப்பார்கள். இவர்கள் விரும்பும் வசதிக்காக பாமரன் சாக்கடையில் கிடக்க வேண்டுமா. காசு கொழுத்து இருப்பவர்கள் தான் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு 500 ரூபாய் கொடுத்துவிட்டு வருவான். பாமரனுக்கு சாலையோர தள்ளுவண்டி ஹோட்டல்கள் தான். அவரே ஒத்துக் கொள்கிறார் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும் வர்க்கம் தான் வந்தே பாரத்தில் செல்ல முடியும் என்று.
கூலி தொழிலாளி தினம் 1000 ரூபாய் சம்பாதிக்கிறான் 600 ரூபாய்க்கு டஸ்மாகில் வாங்கி குடிக்கிறான் அவனுக்கு அதுவே பேரானந்தம் கழிவறையில் பயணம் செய்வது ஒன்றும் பெரிதல்ல
மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேலம் வரை நல்ல வேகம், ஆனால் சேலம் பெங்களூர் போவதற்கும் வருவதற்கும் மூன்றரை மணி நேரம் அதிகமாக உள்ளது.
A sadist snatched away the concession given to the seniors in railway booking. It must be restored.
மக்களுக்கு வந்தே பாரத்..... மோடிஜிக்கு நன்றி ???
it is mainly to discourage short distance travelers
நெரிசல் இருக்க கூடாது. விரைவாக போக வேண்டும். பயண நேரம் குறைய வேண்டும். இடை நிறுத்தம் அதிகம் இருக்க கூடாது. இருக்கைகள் வசதியாக இருக்க வேண்டும். வசதியாக பயணம் செய்ய வேண்டும். குளுகுளு வசதி வேண்டும். வெளிநாட்டில் பயணம் செய்வது போல் இருக்க வேண்டும். அப்படியானால், கட்டணம் அதிகமாகத் தான் இருக்கும். வசதி உள்ளவர்கள் இந்த ரயிலில் பயணம் செய்து விடுவதால், குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வைகை, பல்லவன் மற்றும் இரவு நேர ரயில்களில் எளிதாக இடம் கிடைத்து வருகிறது. நல்ல விஷயம் தான். சாதாரண ஓட்டலுக்கும், நட்சத்திர ஹோட்டலுக்கும் உள்ள வேறுபாடு போன்றது தான் ரயில் பயணமும் என்பதை உணர வேண்டும்.
ஆட்டோகாரார்கள் வசூலிக்கும் தொகையை எவரும் இங்கே குறிப்பிட மாட்டார்கள். 3 km 200 ரூபாய். அதனை எவனும் தட்டி கேட்க துப்பில்லை