மேலும் செய்திகள்
தட்சசீலா பல்கலை., பட்டமளிப்பு விழா
34 minutes ago
காரைக்கால் மீனவர்கள் திரும்பினர்
35 minutes ago
தட்சசீலா பல்கலை பட்டமளிப்பு விழா
39 minutes ago
ஆரோவில்லில் மார்கழி மாத விழா மத்திய அமைச்சருக்கு அழைப்பு
42 minutes ago
விக்ரம் நகர்:நோயுற்ற கால்நடைகளைப் பற்றி மக்கள் புகார் செய்யவும், அவற்றிற்கு மருத்துவ உதவியைப் பெறவும் மூன்று நடமாடும்கால்நடை மருத்துவப்பிரிவுகளுடன் கால்சென்டரை அமைக்க டில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தத் திட்டம் குறித்து மாநில அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கால்நடை பராமரிப்புக்கான கால் சென்டர் அமைப்பதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை கால்நடை மேம்பாட்டுத் துறையின் பராமரிப்புப் பிரிவு முன்வைத்துள்ளது.கால்நடை உதவி தேவைப்படும், அதே நேரத்தில் கால்நடை சேவைகள் கிடைக்காத கால்நடை விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே மேம்பட்ட கால்நடை சேவைகளை வழங்குவதற்கான திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.கால்நடைகளுக்கு உதவி தேவைப்படும் விவசாயிகள், உரிமையாளர்கள் கால்சென்டரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்கள் விரும்பும் இடத்திற்கு நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் விரைந்து சென்று, கால்நடை உள்ளிட்ட விலங்குகளுக்கு சேவைகள் வழங்கப்படும். உதவி எண்
ஹெல்ப்லைன் எண் 1962 செயல்படுத்தப்பட்டு, நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.அனைத்து நாட்களிலும் 12x7 என்ற அடிப்படையில் செயல்படும். விடுமுறை நாட்கள் உட்பட தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இரண்டு ஷிப்டு களில் பணிபுரியும் கால்சென்டர் அமைக்கப்பட உள்ளது.விலங்குகளுக்கு இயல்பான நிலையில் அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும். சிக்கலான வழக்குகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை அல்லது விலங்குகள் தங்குமிடத்திற்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.
34 minutes ago
35 minutes ago
39 minutes ago
42 minutes ago