உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு தேவை: நீட் விவகாரத்தில் காங்., வலியுறுத்தல்

பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு தேவை: நீட் விவகாரத்தில் காங்., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நீட், தேசிய தேர்வு முகமை, என்.சி.இ.ஆர்.டி., ஆகியவை குறித்து பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு செய்ய வேண்டும்' என, காங்., வலியுறுத்தி உள்ளது. நாடு முழுதும் மே 5ல், 'நீட்' யு.ஜி., எனப்படும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இதை, 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதன் முடிவுகள், கடந்த 4ல் வெளியாகின. நீட் தேர்வு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், 720க்கு 720 மதிப்பெண்ணை, 67 பேர் பெற்றனர்.

குற்றச்சாட்டு

வினாத்தாள் கசிவு, ஒருசில தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது போன்றவற்றால், இந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இதற்கிடையே, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட, 1,563 தேர்வர்களின் கருணை மதிப்பெண் திரும்பப் பெறப்பட்டதாகவும், அவர்கள் விருப்பப்பட்டால், மறு தேர்வில் பங்கேற்கலாம் என்றும், இல்லையெனில் கருணை மதிப்பெண்ணை கைவிடலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: நான், 2014 - 2019 வரை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான, பார்லி., நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்தேன். அப்போது, 'நீட்' தேர்வுக்கு நான் முழு ஆதரவை வழங்கினேன். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள், நீட் தேர்வால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சலுகை கிடைக்கும் என்றும், மற்ற மாணவர்களுக்கு அது பாதகமாக இருக்கும் என்றும் கவலை தெரிவித்தனர். இந்த சி.பி.எஸ்.இ., பிரச்னைக்கு சரியான பகுப்பாய்வு தேவை. நீட் பாரபட்சமா? இதில், ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? மஹாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களும், தற்போது 'நீட்' தேர்வு மீது கடுமையான சந்தேகங்களை தெரிவித்துள்ளன.

சந்தேகம்

இதனால், தேசிய தேர்வு முகமையின் நேர்மை மற்றும் நீட் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் விதம் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.கடந்த 10 ஆண்டுகளில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அனைத்து தொழில் திறனையும் இழந்து விட்டது.பார்லி., நிலைக்குழுக்கள் புதிதாக அமைக்கப்படும் போது, நீட், தேசிய தேர்வு முகமை, என்.சி.இ.ஆர்.டி., ஆகியவை குறித்து, முன்னுரிமை அடிப்படையில் ஆழமாக மதிப்பாய்வு செய்யும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான், ஒடிசாவின் சம்பல்பூரில் நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி, 1,563 பேருக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரு இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் உயரதிகாரிகள் யாராவது தவறு செய்திருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; யாரும் தப்பிக்க முடியாது. தேசிய தேர்வு முகமையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sivak
ஜூன் 17, 2024 15:48

நீட் தேர்வில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த காங்கிரஸ் காலை நக்கி பிழைக்கும் சில அதிகாரிகள் வேண்டுமென்றே இந்த வேலையை செய்திருப்பார்கள் ... பிடிபட்ட அதிகாரிகளின் கட்சி பின்புலம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் ... இந்த திருட்டு மாடல் கூட்ட்டமே காங்கிரஸ் களவாணிகளுடன் கூட்டு ஏதாவது சதி செய்து இருக்கலாம்.... இந்த பிரச்சனையில் திருட்டு திமுக மெதுவாக உள்ளே புகுந்து தனது ஆதாயத்திற்காக நீட்டை ஒழிக்க அழிக்க வேண்டும் என்று உருட்டி கொண்டிருக்கிறது .... பிஜேபி இந்த அரசியலை புரிந்துகொள்ள வேண்டும் ..


Maheesh
ஜூன் 17, 2024 09:01

நீட் தேர்வு வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு வரப் பிரசாதம். பல கோடிகள் பணம் போட்டு மருத்துவக் கல்லூரி நடத்தும் பெரும் முலைகளுக்கு தான் பிரச்சினை. மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் லாபி அரசை தவிர்க்கக்கூடிய திசை திருப்பக் கூடிய வலிமையான லாபி. அவர்கள் வருமானம் பார்ப்பதற்கு நீட் தேர்வு தடையாக இருக்கிறது வேறு என்ன செய்வார்கள் அதை நிறுத்தத்தான் முயற்சிப்பார்கள். இந்திய அளவில் பொறியியல் படிப்புகளுக்கும் இதுபோன்ற நுழைவு தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். தற்போது மாணவர்கள் 10 முதல் 15 நுழைவு தேர்வுகள் எழுதுகிறார்கள். இந்த சிரமம் குறையும்.


Varadarajan Nagarajan
ஜூன் 17, 2024 08:17

சம்பந்தப்பட்ட குறை ஆய்வு செய்கின்றது. இரண்டு இடங்களில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறு நடைபெறாமல் இருக்க முனேச்ச்ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்குமேல் என்ன வேண்டும். அரசியல்வியாதிகளின் மருத்துவ கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிறைய பணம் பெற்றுக்கொண்டு மருத்துவம் பயில அனுமதிக்க முடியவில்லை. எனவே நீட்டை ரத்து செய்யவேண்டும். இதைத்தவிர வேறு என்ன. இதை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் கூச்சலிடலாம். இது வேறொன்றும் மக்கள் பிரச்சனைஇல்லை


தாமரை மலர்கிறது
ஜூன் 17, 2024 07:56

நீட் படிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். மண்டுகளுக்கு கஷ்டம். ஏதாவது குற்றம் சொல்லி, நீட்டை நீக்கிவிட்டு, படிக்காத மண்டுகளுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு சீட் கொடுக்க திமுக திட்டம் போடுகிறது. நீட்டில் எந்த குளறும்படியும் இல்லை. மிகவும் சிறப்பாக செயல்படுவதால், பிஜேபிக்கு நல்லபெயர் கிடைக்கிறதே என்று திமுக எரிச்சல் அடைகிறது. சிபிஎஸ்சி சிலபஸ் கஷ்டமாக இருந்தால், அதற்கு மத்திய அரசு என்ன செய்யமுடியும்? மாணவர்கள் தான் படித்து பாஸ் செய்ய வேண்டும். மாநில சிலபஸை மத்திய சிலபஸ் போன்று கடினமாக மாற்றுங்கள். ரெண்டும் ரெண்டும் நாலு என்று பனிரெண்டாம் வகுப்பில் படிக்க கூடாது. மாநில சிலபஸ் மிகவும் எளிதாக வைத்துக்கொண்டு, மத்திய சிலபஸ் கஷ்டம் என்று புலம்பக்கூடாது.


Duruvesan
ஜூன் 17, 2024 07:30

எவனாவது ஒருத்தன் மருத்துவ கல்லூரி அனைத்தும் அரசுடமை ஆக்க படும். எல்லோருக்கும் பீஸ் 44000 மட்டுமே னு சொல்லுவானா?


Kasimani Baskaran
ஜூன் 17, 2024 07:19

ஏதாவது ஒரு நிலைக்குழு ஒழுங்காக வேலை செய்ததா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் பொழுது இதற்கும் நிலைக்குழு என்பது நீதிமன்றத்தையே கேவலப்படுத்துவது போலத்தான். நீட் தேர்வில் மோசடி என்றால் நிட்டை நீக்கவேண்டும் என்பது தலை வலி வந்தால் தலையை வெட்டி எடுக்க வேண்டும் என்பது போலத்தான் இருக்கிறது. சாராயத்தால் நாற்பதாயிரம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தும் கூட டாஸ்மாக்கை தடை செய்யவில்லையே - பின்னர் எப்படி, எதன் அடிப்படையில் நிட்டை நீக்கி விடலாம் என்கிறார்கள் . ஊசிப்போன திராவிட லாஜிக்கால் எந்தப்பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது


Svs Yaadum oore
ஜூன் 17, 2024 06:28

என்.சி.இ.ஆர்.டி., குறித்து பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு செய்ய வேண்டுமாம் .....என்.சி.இ.ஆர்.டி., மதம் மாற்றிகளுக்கு ஆதரவாக உள்ளதா , என்று ஆராய்ச்சி செய்ய வேண்டுமா ??....


sankaranarayanan
ஜூன் 17, 2024 05:51

ரமேஷுக்கு உங்களுக்கு வேண்டுமானால் நீட் தேர்வை நீங்களே அமலுக்கு கொண்டுவருவீர்கள் பிறகு நீங்களே கூட்டணிக்கட்சிக்கு அடிமையாகப்போனபின் இப்போது பப்பு காங்கிரசு திமுக சொல்படி ஆட்டம் போடுகிறது உங்களுக்கு ஒரு நேர்மை ஒரு ஸ்டான்ட் ஒரு கொள்கை வேண்டாமா நாளுக்கு ஒரு சட்டம் கொண்டுவந்து யாரை திருப்திப்படுத்தப்போகிரிர்கள் மக்கள் ஏமார்ந்தவர்கள் அல்ல அல்ல அல்ல


Bala Paddy
ஜூன் 17, 2024 05:09

நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். 60 வருஷம் புடுங்குனது போதும் திமுக திருடர்களை சேத்துக்கிட்டு நீங்க பண்ண அட்டூழியம் போதும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை