உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது

சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது

சண்டிகர்: பஞ்சாப்பில் பைக்கில் சென்ற சிவசேனா பிரமுகரை வழிமறித்து வாளால் நிஹாங்க் சீக்கியர் வெட்டிய சம்பம் நடந்தது.பஞ்சாப் மாநிலம் லூதியானாவி்ல் இரு சக்கரவாகனத்தில் சென்றிருந்த நபரை நிஹாங்க் சீக்கியர் வழிமறித்து அவரிடம் வாக்குவாதம் செய்தார். பின் கையில் வைத்திருந்த வாளால் அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி.யில் பதிவாகியது.போலீசார் விசாரணை நடத்தியதில் வாளால் வெட்டியதில் காயமடைந்த நபர் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சந்தீப் தபார் என்பதும், சீக்கிய மதம் பற்றி அவதூறாக பேசியதால் தாக்கியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சீக்கியரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 06, 2024 02:45

ஹிந்துக்களை முகலாயர்களின் கொடுமையில் இருந்து காக்க உருவாகிய சீக்கிய மத பிரிவு இன்று அதே முகலாயர்களின் கைப்பாவையாக மாறி ஹிந்துக்களை அழிக்க நினைப்பது பாவகரமான செயல். ஹிந்துக்களை தாக்கும் இந்த மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் அப்பாவி பஞ்சாபியரை மதமாற்றம் செய்யும் கிருத்துவர்களை ஒன்றும் செய்யாமல் இருப்பது ஏன்? பாகிஸ்தானில் இருந்த பஞ்சாப் சீக்கியர்களின் மக்கள் தொகை எங்கே போனார்கள்? ஹிந்துக்களை தாக்கும் இந்த மடையர்கள் ஏன் யோசிப்பதில்லை?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ