உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை

ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரெய்சியில் சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக 50 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரின் ரெய்சியில் கடந்த 9ம் தேதி, சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் பலியாகினர்; 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து, மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூன் 14, 2024 06:00

இந்து மத வெறுப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களுக்கு உண்டு. கவனமாக இல்லை என்றால் ஆட்டம் போடத்தான் செய்வார்கள்.


A1Suresh
ஜூன் 14, 2024 00:22

சார் அதன் சரியான பெயர் ரியாஸி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை