உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணையில் குறுக்கிட்ட வக்கீல்: கடுப்பாகி எச்சரித்த தலைமை நீதிபதி

விசாரணையில் குறுக்கிட்ட வக்கீல்: கடுப்பாகி எச்சரித்த தலைமை நீதிபதி

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து குறுக்கிட்டு இடையூறு செய்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பராவை, அறையில் இருந்து வெளியேற்றும்படி, காவலர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்களில் ஒருவருக்காக வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா ஆஜரானார். மற்றொரு மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் நரேந்திர ஹூடா பேசும் போது, மேத்யூஸ் இடைமறித்து பேசினார்.அப்போது, ஹூடாவுக்கு அடுத்து பேசுமாறு மேத்யூசை தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்வருமாறு:மேத்யூஸ்: நான் தான் இங்கு மூத்த வழக்கறிஞர்; நான்தான் பேசுவேன்.சந்திரசூட்: நான் உங்களை எச்சரிக்கிறேன். நீதிபதிகளிடம் இவ்வாறு பேசக்கூடாது; இந்த நீதிமன்றத்துக்கு நான்தான் பொறுப்பு. காவலர்களே! இவரை இங்கிருந்து அகற்றுங்கள். மேத்யூஸ்: நானே இங்கிருந்து செல்கிறேன்.சந்திரசூட்: நீங்கள் அதை சொல்ல வேண்டியதில்லை; நீங்கள் செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித் துறையை பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது.மேத்யூஸ்: நான், 1979ம் ஆண்டில் இருந்தே பார்த்து வருகிறேன். சந்திரசூட்: மற்றொரு வழக்கறிஞர் பேசும் போது நீங்கள் குறுக்கிட முடியாது. இனியும் அதுபோல் தொடர்ந்தால், கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இதையடுத்து, மேத்யூஸ் நெடும்பரா நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரத்துக்கு பின் அறைக்கு திரும்பிய மேத்யூஸ், தலைமை நீதிபதியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரினார்.பின்னர் பைபிளில் உள்ள வசனத்தை மேற்கொள்காட்டி, “பரலோக பிதாவே, நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. அவர்கள் தெரியாமல் செய்த தவறை மன்னியுங்கள்,” என்றார்.வழக்கு விசாரணையின் போது, இது போல் குறுக்கிடுவது மேத்யூசுக்கு புதிதல்ல. கடந்த ஆண்டு மார்ச்சில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறுக்கிட்டு பேசிய அவரை, தலைமை நீதிபதி கண்டித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raj
ஜூலை 28, 2024 06:49

பாவம் செய்யவேண்டியது அப்புறம் மன்னிப்பு கேட்க வேண்டியது. இவன்களுக்கு இதே வேல.


Devarajan
ஜூலை 25, 2024 02:22

Mallu fellow.. no wonder such fellows behaves as if smart n get evacuated.


Rajendran Sundram
ஜூலை 25, 2024 01:30

இவர் எப்பவும் இப்படித்தான் குறுக்கிடுவார் ஆகையால்...


duruvasar
ஜூலை 24, 2024 12:45

இவர் மேல் இதுபோன்ற உத்தரவுகள் நிறைவாகவே இருக்கின்றன. பரமபிதாவே இவருக்கு நல்லறிவை கொடு.


GMM
ஜூலை 24, 2024 08:04

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கம் கூறும்போது மற்றவர் குறுக்கீடு மிக தவறு. தலைமை நீதிபதி எச்சரிக்கும் அளவிற்கு ஒழுக்க நெறிகளை பின்பற்றாத வக்கீல் மீது பார் கவுன்சில், மத்திய நீதி துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? ஊர் பஞ்சாயத்தை கேலி செய்வது உண்டு. நல்லூர் பஞ்சாயத்து முறையை முடக்க கட்ட பஞ்சாயத்து உருவாக்கியது திராவிட இயக்கம். பஞ்சாயத்து விசாரணையில் கணவர், மனைவி தாவா, சகோதரர் தாவா- பெற்றோர், பிள்ளை தாவா.. எதுவாக இருந்தாலும் பலன் பாதிப்பு இருவருக்கும் இருக்கும். பிரிட்டிஷ் நீதி முறை பலன், பாதிப்பு சமமாக இருக்காது. ஆளுக்கு தகுந்த தீர்வு காணப்பட்டு வருகிறது.


Kasimani Baskaran
ஜூலை 24, 2024 05:47

நீதித்துறையில் மேத்யூ, பூஷன் போன்ற போல பல குண்டர்கள் உண்டு.


sankaranarayanan
ஜூலை 24, 2024 02:09

அப்போது கூட தான் உச்ச நீதி மன்றத்தில் தான் தவறு ஒன்றும் செய்யவில்லையாம் அடுத்தவர்கள்தான் தவறை செத்ததுபோல அவர்களுக்காக தன்னை மன்னித்துவிடும்படி கர்த்தரிடம் மணற்றடி கேட்கிறார் கேலிக்கூத்தாகிவிட்டது என்ன ஜோடனை என்ன மதவாத மன்னிப்பு


தாமரை மலர்கிறது
ஜூலை 24, 2024 01:49

உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதித்ததற்கு வழக்கறிஞருக்கு ரெண்டாண்டுகள் ஜெயில் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.


Bala
ஜூலை 24, 2024 01:16

திராவிடியன் பேர்வழி போல மேத்யூஸ்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி