உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநகராட்சிகள் ஆகும் ராய்ச்சூர், பீதர், ஹாசன்

மாநகராட்சிகள் ஆகும் ராய்ச்சூர், பீதர், ஹாசன்

 மாநகராட்சிகளில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக, 'மகாத்மா காந்தி நகர வளர்ச்சி 2.0' திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் அறிவிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு ராய்ச்சூர், பீதர், ஹாசன் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. புதிதாக தார்வாட் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது 'நகரோத்தனா' திட்டம் 4ன் கீழ், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 2025 - 26ம் ஆண்டிற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு நகர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு கட்டணங்கள், வரி வசூல் செய்வது, இனி ஆன்லைன் மூலம் பெறப்படும் அனைத்து மாநகராட்சிகள், மாவட்ட நகர வளர்ச்சி பிரிவுகள், உள்ளாட்சி அமைப்புகளில், அலுவலக பணிகளை கணினிமயமாக்குவது கட்டாயமாக்கப்படும் கர்நாடக நகர நீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில், ராம்நகர், உல்லால் பகுதிகளுக்கு, 705 கோடி ரூபாய் செலவில், குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும். 'அம்ருத் - 2.0' திட்டத்தின் கீழ், 233 குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்துடன், 142 கோடி ரூபாய் செலவில், ஷிகாரிபுரா, சாகர், ஐனாபுரா, எம்.கே.ஹுப்பள்ளி, குடச்சி, பைலஹொங்கல், சஹாபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய நகரங்களில், வடிகால் வசதி செய்யப்படும் கட்டட வடிவமைப்பு மற்றும் திட்டங்களுக்கு, ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் வகையில், 'ஒருங்கிணைந்த நில மேலாண்மை அமைப்பு' என்ற புதிய தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பான ஹார்டுவேர் தரம் உயர்த்தப்படுவதற்கு தேவையான நிதி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை