உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா?: காங்கிரஸ் கேள்வி

பீஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா?: காங்கிரஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியதாவது: 3வது முறையாக பிரதமர் ஆக உள்ள, மோடிக்கு 4 கேள்விகளை கேட்க விரும்புகிறேன். ஏப்ரல் 30, 2014ம் ஆண்டு புனித நகரமான திருப்பதியில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அந்த வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்படுமா?. விசாகப்பட்டினம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை இப்போது நிறுத்துவீர்களா?.

சிறப்பு அந்தஸ்து

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் உங்களின் 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியையும், உங்கள் கூட்டாளியான நிதிஷ் குமாரின் பத்தாண்டு கால கோரிக்கையையும் நிறைவேற்றுவீர்களா?. பீஹார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா?. இவ்வாறு ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பேசும் தமிழன்
ஜூன் 07, 2024 12:04

மோடி அவர்கள் மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பார்..... நீங்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த போது மக்களுக்கு நல்லது உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை ???


venugopal s
ஜூன் 06, 2024 21:30

கிடைக்காவிட்டால் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள், அவ்வளவு தான்!


sankaranarayanan
ஜூன் 06, 2024 20:56

மற்றவர்களை தூண்டிவிட்டு வேடிக்கைபார்ப்பதே இந்த தோல்வியுற்ற காங்கிரசின் வேலை அடுத்தவர்களை வாழ விடவும் மாட்டார்கள் தாங்களும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள் இதுதான் கான்கிரசின் கொள்கை


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 06, 2024 20:00

திருட்டு கான் காங்கிரஸ் ஆரம்பித்து விட்டார்கள் அவர்களது பிரிட்ஷ் காலத்து பிரிக்கும் வேலையை. செத்துப்போன காங்கிரஸ்க்கு கர்நாடக லிங்காயத்துக்கள் ஜாதி வெறியால் பால் ஊற்றினார்கள், தற்போது உத்திரபிரதேச யாதவ்கள் அதே மாதிரி சம்ஜவாடி பார்ட்டிக்கு பால் ஊற்றி உயிர் கொடுத்து தலைவலியை வாங்கி உள்ளார்கள்.


Jaga
ஜூன் 06, 2024 20:00

சிறப்பு அந்தஸ்துகள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை காங்கிரசுக்கு தேவைபட்டால் யாருக்கு வேண்டுமானாலும் சிறப்பு அந்தஸ்து தருவார்கள் அதைவைத்து ஆட்சியையும் பிடிப்பார்கள் அதுசரி மற்ற மாநிலங்களை சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் ஒரு மாநிலத்திற்க்கு அடிமையாக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது


தாமரை மலர்கிறது
ஜூன் 06, 2024 19:50

மக்களை சாதிவாரியாக பிரிக்க முடியாது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கோட்டா அரசியல் ஒழிக்கப்படவேண்டும். ஒரு மாநிலத்திற்கு சிறப்புக்கு அந்தஸ்து கொடுத்தால், இன்னொரு மாநிலம் பாதிக்கப்படும். ஒரு பிள்ளைக்கு சோறு ஊட்டிவிட்டு, இன்னொரு பிள்ளையை பட்டினி போடமுடியாது. அதனால் பீகார் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது.


cbonf
ஜூன் 06, 2024 19:31

மோதி அவர்களின் அடுத்த இலக்கு நேஷனல் ஹெரால்ட் ஊழலில் கொள்ளை அடிதவர்களை உள்ளே தள்ளுவது தான். கேஜரியுடன் சிறைக்கூட்டாளியாக தாயும் சேயும் ஆகிவிடுவார்கள்


theruvasagan
ஜூன் 06, 2024 19:21

இந்தா. பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் கேட்டா உன்னோட இலைக்கும் வரும்னு நெனைக்காதே. உனக்குதான் இலையே போடலயே..


Lion Drsekar
ஜூன் 06, 2024 18:07

மனிதனுக்கும் காட்டு விலங்காலுக்கும்தான் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்போய்விட்டதே , அதனால்தான் அதன் பெயரில் மனிதன் தன்னையே முன்னிறுத்தும் காலம் வந்துவிட்டது . அவைகளுக்கு இருக்கும் பிரநிதிகள் தேர்தலில் போட்டியிடுவது இல்லை , வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பது இல்லை , மற்றபடி மக்களின் வாழ்க்கையும் காட்டு விலங்குகளின் வாழ்க்கையும் ஒன்றுதான் . ஒவ்வொரு செயல்பாட்டிலும் கூர்ந்து கவனித்தால் வாழ்க்கை முறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் ஒன்றாகிவிட்டது . ஆகவே காட்டு விலங்குகளின் மனம் கோணாமல் ஒரே ஒரு உதாரணம் மட்டும் இங்கே நாம் பார்க்கலாம், ஹெய்னா heyna என்று ஒரு கூட்டம் இருக்கிறது . உருவம், மிக சிறியது , ஆனால் அவைகள் மிக மிக ஒற்றுமையாக இருக்கும் , எப்பேர்ப்பட்ட மிருகங்களாக இருந்தாலும் இவைகள் ஒற்றுமையாக இவைகள் தேர்ந்தெடுக்கும் மிருகங்களை சுற்றி நின்றுகொண்டு , நல்ல ஆரோக்கியமாக இருக்கும் மிருகங்களாக இருந்தாலும் அந்த மிருகத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும் , தூங்க விடாது , இறையை வேட்டையாடி அவைகள் திண்றுகொண்டு இருந்தாலும் , அவைகள் தின்பதற்கும் இவைகள் நாலாப்பக்கும் சூழ்ந்துகொண்டு வேட்டையாடி தின்ன முயன்ற மிருகத்தை துரத்திவிடும் . இவைகளும் ஒன்றுக்கொண்டு கடித்துக்கொண்டு வேட்டையாடி , அதிலேயே ஒற்றுமையாகவும் வாழும் . அதே நேரத்தில் சிங்கமாக இருந்தாலும் , யானையாக இருந்தாலும் இவர்களிடத்தில் அகப்பட்டால் , உட்க்கார விடாமல் , தூங்க விடாமல் , அதையும் நிம்மதி இழக்கச்செய்து , காலில் கடித்து, வாழைக்கடித்து, புண்ணாக்கி, கீழே விழச்செய்து . ஒற்றுமையுடன் கூட்டமாக ஒன்றுசேர்ந்து எலும்புக்கூடு மட்டும் மீதம் இருக்கும் அளவுக்கு உண்டுவிட்டு , அடுத்த மிருகத்தை வேட்டையாடக்கிளம்பும். அது போல் இன்று .... வந்தே மாதரம்


RAJ
ஜூன் 06, 2024 17:57

ஜெயராமா, இப்போ அவிங்க ரெண்டு பெரும் உங்க பக்கம் வந்துட்டா, நீங்க இத்த எல்லாம் பண்ணிடுவீங்களா? கேள்வி கேட்கறத நிறுத்திப்புட்டு வோட்டு போட்ட மக்களுக்கு உறுப்பிடிய ஏதவது செய்ய பாருங்க..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை