வாசகர்கள் கருத்துகள் ( 84 )
இந்தியாவின் சாபக்கேடு. இந்திய சரித்திரத்தில் இதுபோன்ற நிதி அமைச்சர் யாரும் இருந்ததில்லை
சேமிப்புக்கு முதலீட்டுக்கு வரி விதிப்பு என்பது வசதியானவர்களுக்கான சலுகைகள் தான். தன்னால் சேமிக்க முடியாத அளவிற்கு பொருளாதார நிலையில் உள்ள ஒருவரிடம் வரியை கட்டாயமாக்கி அதை சேமிக்கும் நிலையில் இருக்கும் மாற்றொருவருக்கு வரிவிலக்கு அல்லது வரி சலுகை என்பது ஏற்க முடியாத ஒன்று.
வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை.
1 பாரதத்தின் பெயர் உலக அரங்கில் புகழின் உச்சியில் உள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. கடந்த பத்து வருடங்களில் நடுவண் அரசு, எந்த கொள்ளையும் அடிக்கவில்லை என்பதும் உண்மை. 2 மாநில குன்றிய அரசுகளைச் சேர்ந்த பல அமைச்சர்கள், பல லட்சம் கோடிகளை தகாத வழியில் ஈட்டி, எந்தவித தண்டனையும் அடையாமல் கோலோச்சி வருகின்றனர் என்பதும் நிதர்சனம். 3 ஆனால் வருமானவரி கட்டும் நடுநிலை மக்கள் மட்டும் கிட்டத்தட்ட 65 சதவீதம் கட்டி வருமானம் + பொருட்கள் வரி எல்லாம் சேர்த்து, எந்தவித சேமிப்பும் இல்லாமல் துயரத்தில் உள்ளனர். இதற்கு விடிவுகாலம் பிறந்தால் நலம் ஆட்சியை தக்க வைக்க சந்திரபாபுவுக்கும், நிதீஷுக்கும் செவி சாய்க்கும் நடுவண் அரசு, சாதாரண மக்களுக்கும் உதவிடுமா?
முடிந்தவரையில் நடுத்தர மக்களை கொள்ளையடிப்போம்.
தங்களுக்கு 200 கொடுத்து மகிழ்விக்கும் மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் எத்தனை பேர், எவ்வளவு கொள்ளை அடிக்கின்றனர் மற்றும் அடித்தனர் என்பது யாவரும் அறிந்ததே. இந்த கொள்ளையை தவிர்த்து, நாட்டு நலனில் சேர்த்திருந்தால், விலைவாசி ஏற்றம் என்பது எப்பொழுதோ தவிர்க்கப்பட்டிருக்கும். ஆகையால் தங்களது நெற்றிக் கண்ணை தங்களுக்கு 200 அளித்து மகிழ்விக்கும் அரசு மேல் விழுந்து, அது செய்யும் பெரும் பாதகமான ஊழலை எரிக்கட்டும் முதலில்.
உண்மை தான் நடுத்தர மக்களை மோடி அரசு வஞ்சித்து கொண்டுள்ளது, மற்றபடி வரி வசூலை நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஊழல் செய்யாமல் செய்து கொண்டுள்ளது, மன்மோகன் கொடுத்த சலுகை விலை பெட்ரோலுக்கு வாங்கிய கடன்கள் சுமார் ஒன்றரை லட்சம் கோடியை மோடி அரசு அடைத்துள்ளது. இதெல்லாம் அரசு நிதி சுமையின்றி நடக்க உதவுகிறது, நடுத்தர மக்களும் நிதி சுமையின்றி கள்ள மோடி அரசு இந்த முறை எதாவது செய்தாக வேண்டும், இல்லை எனில் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
ஐயா பெட்ரோல் கடனை அடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மம்மோகன் அரசு குறைந்த விலையில் பெட்ரோல் கொடுத்ததால் நம்நாட்டில் விலைவாசி குறைவாக இருந்தது நடுத்தர மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கல். ஆனால் கடந்த பத்துஆண்டுகளில் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததுதான் மிக மிக அதிகம். இதனால் பலன் அடைந்தவர்கள் பெரும்தொழில் அதிபர்கள் மட்டுமே. நம்மை போன்ற நடுத்தர மக்கள் அதிக விலைக்கு பெட்ரோல் போட்டே வருமானம் காலியாகி விடுகிறது. இதை எல்லாம் யார் கேட்பது.
நடுத்தர வர்க்கத்திற்கு நாமம்
காங்கிரசின் 60 ஆண்டு கால மோசமான ஆட்சியின் அவலட்சணத்தை சரி செய்வதற்கே 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. 1966-ல் நகர்வாலா கேசில் இந்திராகாந்தி 60 lacs கொள்ளையடித்தார் .
இந்த நாட்டில் எட்டு சதவீத மக்கள் மட்டுமே வருமானத்தை பதிவு செய்கிறார்கள். ஒரு சதவீதம் பேர் வருமானம் இல்லை என ஜீரோ ரிட்டர்ன் பைல் செய்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், முதியோர்கள், விவசாயிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இவர்களே மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் வந்துவிடுவார்கள். மீதி உள்ளவர்களில் பதினைந்து சதவீதம் பேர்தான் வருமான வரி கட்ட தகுதியானவர்கள். ஆனால், இதில், ஏழு சதவீதம் பேர் தான் வரி கட்டுகிறார்கள். இவர்களையும் 3 பிரிவுகளாக பிரிக்கலாம். 1. மாத சம்பளம் வாங்குவோர் 2. கார்ப்பரேட் நிறுவனங்கள் 3. பதிவு செய்த பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் மற்றும் உற்பத்தி தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்கள். நாட்டில் இருபது லட்சம் சொத்து உள்ளது என இந்தியாவில் கணக்கு காட்டியவர்கள் வெறும் 40 ஆயிரம் மட்டுமே. (நம்புங்கள் ஸ்டாலினுக்கு சொந்தமாக கார், வீடு இல்லை என்று அவரே வேட்பு மனு தாக்கலின் போது கணக்கு காட்டி உள்ளார்). உதயநிதி தாக்கல் செய்த சொத்து விபரங்களை எடுத்துப் பாருங்கள் அதுவும் இப்படித்தான் இருக்கும். அனைத்து அரசியல்வாதிகளும் இப்படித்தான் சொத்து கணக்கு காட்டுகிறார்கள். இங்கு கருத்து சொன்னவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது நாட்டில் வேலை கொடுப்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தான். மறைமுக வரி மற்றும் ஜிஎஸ்டி- ஐ எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்பவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டியது இல்லை. அதாவது மாதம் மூன்று புள்ளி ஐந்து லட்சம் வரை விற்பனை செய்பவர்கள் அல்லது ஒரு நாளைக்கு பனிரெண்டாயிரம் வரை விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டியது இல்லை. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நம்மூரில் உள்ள பிரியாணி கடைகள், புரோட்டா கடைகள், பேக்கரிகள், ஸ்வீட் கடைகள், சிறு நகைக் கடைகள், பலசரக்கு கடைகள் வைத்திருப்பவர்கள் வியாபாரம் செய்யாமலா இருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஐ டி அல்லது ஜிஎஸ்டி கட்டுவது இல்லை. பல கடைக்காரர்கள் ஜி எஸ் டி கட்டாமல் வெறும் வெள்ளை பேப்பரில் எஸ்டிமேட் என்று எழுதி தருகிறார்கள். சிமெண்ட் விற்பவர்கள், ஹார்டுவேர் கடைக்காரர்கள், எலக்ட்ரிக்கல் பொருள் விற்பவர்கள் பலர் இப்படித்தான் செய்கிறார்கள். இங்கு யோக்கியன் போலவும், ஏழைகளுக்காக பரிதாபப்படுவது போலவும் கருத்து பதிவிடுவோர்கள் ஜி எஸ் டி கட்டாத பொருட்களை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பார்களா?
சேவியர் சொன்னது ரொம்ப ரொம்ப சரி. நமது நாட்டில் வரி கட்டாமலேயே யோக்கியன் போல பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காங்கிரஸ் முதல் பாரதிய ஜனதா வரை எல்லோரையும் உள்ளே கொண்டு வர யாரும் யோசிப்பது இல்லை. ஏற்கனவே வரி கட்டுவோரை கூட கட்ட வைக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ரிமைண்டர் அனுப்புகிறார்கள். கடந்த ஆண்டை விட கம்மியாக கட்டியிருந்தால் விளக்கம் கேட்கிறார்கள். வரியே கட்டாத கோடிக்கணக்கான ஏமாற்று பேர்வழிகள் சவுகரியமாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். வெறும் 30 ஆயிரம் சம்பளத்துக்கு ஒத்த ரூமில் நான்கு பேர் வாழ்க்கை நடத்தும் நகரவாசிகள் மட்டும் கஷ்டப்படுவது இந்த யோக்கியர்களுக்கு தெரியாது.
என் வீட்டில் ஒரு மின் விசிறி வைக்க நான் ஏன் ரூ.135 9% of 1500 மத்திய அமைச்சர்களின் ஆடம்பரத்துக்கு கொடுக்க வேண்டும்?
முடி வெட்டிக் கொள்ள 18 % GST உண்டு 300 + 54 வரி
Exemption for senior citizens especially nonpensioners, who are not involved in any trading activities, depending solely upon interest income from deposits in banks, deduction of TDS may be considered since several nonpensioners suffer to meet their day-to-day needs, There are several in rental portions only.
மேலும் செய்திகள்
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
13 hour(s) ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
16 hour(s) ago
அதிகாலையில் வெடித்த மின்மாற்றி துணிக்கடை எரிந்து நாசம்
16 hour(s) ago
சில வரி செய்திகள்
16 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
16 hour(s) ago | 1
ரயில் பயணியிடம் நகை, பணம் திருட்டு மதுரை பெண்கள் இருவர் கைது
16 hour(s) ago