உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது விமானத்தில் 112 இந்தியர்கள் வருகை

3வது விமானத்தில் 112 இந்தியர்கள் வருகை

சண்டிகர்: அமெரிக்காவிலிருந்து மூன்றாம் கட்டமாக, 112 இந்தியர்களுடன், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு அமெரிக்க ராணுவ விமானம் வந்தது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி, 104 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். 2வது கட்டமாக, பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து மூன்றாம் கட்டமாக, 112 இந்தியர்களுடன், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு அமெரிக்க ராணுவ விமானம் நேற்றிரவு 10:03 மணிக்கு வந்தது. இதில் பஞ்சாபைச் சேர்ந்த 31 பேர், ஹரியானாவைச் சேர்ந்த 44 பேர் வந்தனர். குஜராத்தில் இருந்து 33 பேரும், உத்தர பிரதேசத்தில் இருந்து இருவரும், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் இருந்து தலா ஒருவரும் இந்த விமானத்தில் வந்தனர்.அவர்களது ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு சிலரின் உறவினர்களும், விமான நிலையம் வந்து அவர்களை அழைத்து சென்றனர். இதுவரை மூன்று விமானங்களில், 332 இந்தியர்கள் நம் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.மொத்தம், 18,000 பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்த விமானங்களில் வருவர் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajan A
பிப் 17, 2025 17:43

இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமே.


Sridhar
பிப் 17, 2025 15:21

மீண்டும் மீண்டும் தவறான செய்தி. இம்மாதிரி சட்டவிரோதமாக குடியேற முயன்ற இந்தியர்கள் கை கால்களில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்படுவது நீண்ட நாட்களாக ஒவ்வொரு வருடமும் நடந்து வருவதுதான். இது ஒன்றும் புதிதாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு நடைபெறும் விசயம் அல்ல. இதை தினமலர் போன்ற நியாயமான பத்திரிக்கைகளாவது உரக்க சொல்லவேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 17, 2025 17:47

பொய்யாக எழுதுகிறீர்கள். டிரம்ப் பதவி ஏற்கும் முன்பு இருந்த 5 ஆண்டுகளில் யாரும் திருப்பி அனுப்பப்படவில்லை.


புதிய வீடியோ