உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாமியார் வீட்டில் 16 ஆண்டு சிறைவாசம்; பெண்ணை அதிரடியாக மீட்ட போலீஸ்

மாமியார் வீட்டில் 16 ஆண்டு சிறைவாசம்; பெண்ணை அதிரடியாக மீட்ட போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில், திருமணம் முடிந்து 16 ஆண்டுகளாக பெற்றோருடன் தொடர்பின்றி, மாமனார் - மாமியாரால் கொடுமைக்குள்ளான பெண்ணை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டனர்.மத்திய பிரதேசத்தின் நர்சிங்புர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிஷண்லால் சாஹு, 75; இவர், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை சமீபத்தில் அளித்தார்.

உடல்நல பாதிப்பு

அதன் விபரம்:

என் மகள் ராணு சாஹுவுக்கு, 2006ல் திருமணம் நடந்தது. ஜஹாங்கிராபாத் என்ற இடத்தில் கணவர் மற்றும் மாமனார் - மாமியாருடன் வசிக்கிறார். இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.என் மகள், கடந்த 2008 முதல் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. பலமுறை அவரது வீட்டுக்கு சென்றும் சந்திக்க முடியவில்லை. ஆனால், என் மகள் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் வாயிலாக தகவல் கேட்டறிந்து வந்தேன்.இப்போது, என் மகள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பிள்ளைகள் அங்கிருந்து வேறு இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. என் மகளை உயிருடன் மீட்டு தரவேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை

இதையடுத்து, ஜஹாங்கிராபாத் சென்ற மகளிர் போலீசார், ராணு குறித்து அவரது மாமியார் - மாமனாரிடம் விசாரித்தனர். அவர் வீட்டின் இரண்டாவது மாடியில் இருப்பதாக தெரிவித்தனர்.அங்கு சென்று பார்த்தபோது, கடுமையான உடல்நிலை பாதிப்புடன் அவர் படுக்கையில் கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பேசக்கூட தெம்பு இல்லாத நிலையில் அரை மயக்க நிலையில் கிடந்தார். அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மாமனார் - மாமியாரிடம் விசாரணை நடந்து வருகிறது.அந்த பெண், 16 ஆண்டுகளாக எதற்காக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டார் என்ற தகவல், அந்த பெண் உடல்நிலை தேறியபின் தெரியவரும் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sundram
அக் 07, 2024 11:33

அமைதி மார்க்கம் என்றால் அப்படி தான் இருக்கும்


Rajathi Rajan
அக் 07, 2024 11:30

அங்கு ஆளும் அரக்க தலைவன் எவ்வழியோ மக்களும் மாமியாரும், மாமனாரும் அவ்வழியோ


வைகுண்டேஸ்வரன்
அக் 07, 2024 08:50

நல்லவேளை இது இந்து குடும்பம். இல்லன்னா இங்கே கரகாட்டம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.


Arul. K
அக் 07, 2024 05:39

இது தெரியாதா அவரின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து வைத்திருந்திருப்பார்கள்


Kasimani Baskaran
அக் 07, 2024 05:17

தனக்கு வாய்த்த மருமகளை மட்டும் அடைத்து வைப்பார்கள் - அதே சமயம் தங்களது மகள் மட்டும் அடுத்த வீட்டில் இராணி போல வாழவேண்டும் என்று நினைப்பார்கள். வாழவந்த பெண்ணை அடைத்து வைத்து இன்புறும் இது போன்ற சமூகவிரோதிகளை கழுவேற்றினாலும் கூட தப்பில்லை.


Govinda raju
அக் 07, 2024 04:37

16 வருட மாக மவுனம் சாதத்த அப்பன் ஒரு ஐந்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை