உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சலிசத்தை ஒழிக்க உறுதியாக இருக்கிறோம்: அமித்ஷா திட்டவட்டம்

நக்சலிசத்தை ஒழிக்க உறுதியாக இருக்கிறோம்: அமித்ஷா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மார்ச் 31ம் தேதி, 2026 க்குள் நக்சலிசத்தை ஒழிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கான்கர் மாவட்டத்தில் நக்சல் அமைப்பின் தளபதி, 13 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 21 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்தனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சத்தீஸ்கரின் கான்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 21 பேர் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அவர்களில் 13 பேர் நக்சல் அமைப்பில் நீண்ட காலமாக இருந்தவர்கள்.பாஜ அரசின் அழைப்பின் பேரில் வன்முறையைக் கைவிட்டு, சரண் அடைந்ததற்கு நான் அவர்களைப் பாராட்டுகிறேன். இன்னும் துப்பாக்கிகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களும் விரைவில் சரணடையுமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன். 2026 மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசத்தை ஒழிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 23:44

மண்ணின் மைந்தர்களுக்கு நக்சல் முத்திரை குத்தி விட்டு இயற்கைவளங்களை ஏக்கர் ஒரு ரூபாய்க்கு அதானிக்கு தாரை வார்ப்பதில் உறுதியாக இருக்காங்க பாகிஸ்தான் பார்டரை கூட விட்டு வைக்கல்லை


RAMESH KUMAR R V
அக் 27, 2025 17:58

வருங்கால இந்தியா மிகவும் பாதுகாப்புடன் இருக்க இது போல கடுமையான சூளுரைகள் பயன்பெறும். வளர்க பாரதம்.


Murthy
அக் 27, 2025 17:47

வறுமையை ஒழித்தால் ...தானாக நக்சலிசம் ஒழியும்


Thravisham
அக் 27, 2025 20:45

திருட்டு கழகத்தை ஒழித்தால் ஊழலும் பிரிவினைவாதமும் தானாக ஒழியும்


GMM
அக் 27, 2025 17:43

வன பகுதியில் நக்சல் ஒழிப்பு எளிது. அர்பன் நக்சல் தேசம் முழுவதும் வியாபித்து அரசியல், சாதி, மத, தொண்டு அமைப்பில் கலந்து விட்டனர். சட்ட, பண, இருப்பிட, அந்நிய உதவி பெறுவது எளிது. ஒழிப்பு கடினம்.


Thravisham
அக் 27, 2025 20:46

அடுத்த டார்கெட் அதுதான்


Ramanujadasan
அக் 27, 2025 17:04

அப்படியே திராவிடத்தையும் ஒழிக்க முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்


V Venkatachalam, Chennai-87
அக் 27, 2025 16:11

இவர் சொல்றது வட இந்தியாவை பத்தி தானே. அதுனால தேன் இந்தியாவில் டமில் நாட்டுக்கு என்னா பிரயோஜனம்?


SUBBU,MADURAI
அக் 27, 2025 15:45

The wretched legacy of UPA In 2014, as many as 125 districts in India were affected with Maoist terrorism Today it is down to 11 Naxal terror will be completely wiped out by March 31, 2026 Biggest most historic achievement of Modi 50 year old problem solved.


uma
அக் 27, 2025 15:39

நக்சலைசத்தை ஒழிக்க வேண்டும் இது நல்ல முயற்சி தான்


Ramesh Sargam
அக் 27, 2025 15:39

அப்ப அப்ப ஊழலையும் ஒழிக்க உறுதி எடுங்க.


ASIATIC RAMESH
அக் 27, 2025 15:28

அப்படியே சுயநல அரசு அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும் தூய்மைப்படுத்துங்கள்.... அவ்வாறு செய்தால் நமது பாரத தேசம் மாபெரும் தற்சார்புடைய வல்லரசாக விரைவில் மாறிவிடும்....


முக்கிய வீடியோ