உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "மக்களுக்கு சேவை செய்வதே பா.ஜ.,வின் அரசியல்" - ராஜ்நாத்சிங் பேச்சு

"மக்களுக்கு சேவை செய்வதே பா.ஜ.,வின் அரசியல்" - ராஜ்நாத்சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: 'மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் பா.ஜ., அரசியல் செய்து வருகிறது. நாட்டை ஆள்வதற்கு அல்ல' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.ஒடிசாவில் நபரங்பூர், கலஹண்டி, போலங்கிர் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரஸ் உருவாக்கிய அரசியல் நம்பகத்தன்மை நெருக்கடிக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை பா.ஜ., உருவாக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் மறந்துவிட்டது. இதனால் மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆனால், 2014ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் பா.ஜ., அரசியல் செய்து வருகிறது. நாட்டை ஆள்வதற்கு அல்ல. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

g.s,rajan
பிப் 22, 2024 18:07

எந்த மாதிரி மக்களுக்கு ...???>


திகழ்ஓவியன்
பிப் 22, 2024 18:39

CORPORATE மக்களுக்கு : கார்பொரேட் SILENCE


g.s,rajan
பிப் 22, 2024 17:37

அதுதான் இந்திய மக்களை சும்மா சேவை மாதிரி நசுக்கிப் பிழியறீங்களே.....


g.s,rajan
பிப் 22, 2024 17:30

இந்தியாவில் அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்கு,மற்ற கோடீஸ்வரர்களுக்கு ரொம்ப நல்லாவே சேவை செய்யறீங்க ,சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு விலைவாசி உயர்வும் ,எரிபொருள் விலை உயர்வும் ,மற்ற வரி உயர்வுகளும்,வேலை இல்லாத் திண்டாட்டமும் ,குறைந்த வருமானமும் ,மீள முடியாத கடன்களும் ,குருவி குருவியாக சேர்த்து வைத்த சேமிப்புக்கள் கட்டைமண்ணாய்க் கரைந்ததுதான் மிச்சம்....


venugopal s
பிப் 22, 2024 17:03

அப்புறம் ஏன் இத்தனை கோல்மால்,தகிடு தத்தம், குதிரை பேரம், பணம் செலவழித்து குறுக்கு வழியில் போயாவது தோற்ற மாநிலங்களில் கூட ஆட்சியைப் பிடிக்கின்றீர்கள்? நம்பும்படி இல்லையே!


T.sthivinayagam
பிப் 22, 2024 15:43

என் மண் வெள்ளத்தில் எண் மக்கள் வெள்ள பாதிப்பில் நிவாரணம் எங்கே மக்கள் தான் கேட்குன்றனர்


Google
பிப் 22, 2024 15:11

oooooohhhhh


S.F. Nadar
பிப் 22, 2024 15:09

ஆம் ..சென்னைக்கு, தென் தமிழகத்துக்கு பெரு வெள்ளம் வந்த பொது பார்த்தோம்


Narayanan Muthu
பிப் 22, 2024 15:00

வேலை இல்ல திண்டாட்டம் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி ஏற்றம் பெட்ரோல் டீசல் காஸ் விலை ஏற்றம் இதெல்லாம் மக்களுக்கு செய்யும் சேவைகளா. வாக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடைபெறாமல் வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்தினால் மக்கள் உங்களை வச்சு செய்வார்கள். மனிதாபமற்ற கொடூரர்களின் கூடாரம் பாஜக.


Kanagaraj M
பிப் 22, 2024 14:23

Do for money crocodiles.


முருகன்
பிப் 22, 2024 14:22

தவறு முதலாளிகளுக்கு மட்டுமே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ