உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசின் திட்டங்களால் வேலைக்கு வர மறுக்கும் தொழிலாளர்கள்: எல் அண்ட் டி தலைவர் வருத்தம்

அரசின் திட்டங்களால் வேலைக்கு வர மறுக்கும் தொழிலாளர்கள்: எல் அண்ட் டி தலைவர் வருத்தம்

புதுடில்லி: அரசின் நலத்திட்டங்கள் காரணமாக, தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு வேலை செய்ய வர மறுக்கின்றனர் என லார்சன் & டூப்ரோ( எல் அண்ட் டி) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் கூறியுள்ளார்.பெரும்பாலான நிறுவனங்களில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் பணி நேரமும், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் பணியாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கின்றனர். கடந்த மாதம், எஸ்.என். சுப்பிரமணியன் தனது ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அவர் உரையாடிய வீடியோவில் பேசியதாவது: வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். நாட்டின் வலுவான பணி நெறிமுறையால் சீனா, அமெரிக்காவை மிஞ்சும். அதுதான் உங்களுக்கான பதில். இவ்வாறு அவர் பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில் சென்னையில் நேற்று சி.ஐ.ஐ., சார்பில் நடந்த விழாவில் சுப்ரமணியன் பேசியதாவது: வாய்ப்புகளை தேடி தொழிலாளர்கள் வர மறுக்கின்றனர். அரசின் பல்வேறு திட்டங்களினால்( மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஜன்தன் கணக்குகள், நேரடி மானியம் ஆகியன) உள்ளூர் பொருளாதாரம் நன்றாக இருப்பதால், அவர்கள் வர மறுக்கின்றனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இந்தியாவின் கட்டுமானத்துறையை பாதிக்கும்.இன்று இந்தியா விசித்திரமான பிரச்னையை எதிர்கொள்கிறது. எல்&டி நிறுவனத்திற்கு 4 லட்சம் தொழிலாளர்கள் தான் தேவை. ஆனால், பலர் பணியை விட்டு விலகி வருவதால் 16 லட்சம் பேரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது.பணவீக்கத்திற்கு ஏற்ப தொழிலாளர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை அதிகம் ஈர்க்கும் மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், இந்தியாவில் வழங்கப்படுவதை விட 3 முதல் 3.5 மடங்கு அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Prabu
பிப் 18, 2025 16:42

மிக சரியான கருத்துக்களை கூறினீர்கள் சார் , இது விவசாய கூலி ஆட்கள் கிடைப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி மிகுந்த நாட்கள் ஆகிவிட்டது , இப்போது இந்த பிரச்சனை நிறுவுனங்களையும் பாதிக்க தொடங்கி உள்ளது , மத்திய அரசு இந்த ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்தால் தான் நல்லது


GoK
பிப் 14, 2025 07:19

சாராயம், பிரியாணி, வேட்டி, சட்டை, மின்சாரம், பஸ் சவாரி ...எல்லாம் இலவசம், கைல காசு வேறு எதுனாச்சும் செலவுக்கு ...உங்க வேலை யாருக்கு வேணும் போவியா இது திராவிட மாடலு ...தெரியுமில்ல?


Kannan P
பிப் 13, 2025 12:11

நீங்கள் மட்டும் தின்று கொழுத்து சகலவிதமான வசதி செய்து கொள்வீர்கள் ஆனால் தொழிலாளர்களை குறைந்த சம்பளம் கொடுத்து அவர்களை சுரண்டி வாழ்வீர்கள் உங்களுக்கு என்ன சம்பளமோ அதே சம்பளம் தொழிலாளிக்கு கொடுத்து பாருங்கள் அப்படி செய்தால் வெளிமாநில தொழிலாளர் காலை பிடித்து கெஞ்ச தேவையில்லை


T.S.SUDARSAN
பிப் 13, 2025 11:27

ஏல்&T நிறுவனம் தன்னுடைய அலுவலர்கள் வாரம் ஒருமுறை 90 மணி நேரம் வேலை செய்ய சொன்னால், செய்தால், ஒரு மனித உடலில் உணர்வில் கலந்துள்ள- 8 மணி நேரம் தூக்கம் + 2 மணி நேரம் 3 வேலை உண்வு + டி+ காபி + காலை கடன்+ குளிக்க 1 மணி நேரம்+ பஸ் + டூ வ்ஹீலர் + கார்+ இதர வாய் டிரான்ஸ்போர்ட் சேர்த்து 2 மணி நேரம் = 12 மணி நேரம் போக 12 மணி நேரம் மிச்சம் உள்ளது. 12 x 7 நாட்கள் = 84 மணி நேரம் மிச்சம் உள்ளது. எப்படி 90 மணி நேரம் செய்ய முடியும். இதுக்கு ஒய்விற்கு + எண்டெர்டைன்மென்டிற்கு நேரம் ஒதுக்கவில்லை. எப்படி இவர்களின் வேலை செய்ய முடியும். ஒரு ஆளுக்கு rs 300 சம்பளம்+ rs 30 தங்குவதற்கு + rs 20 -3 வேளை சாப்பாடு .டோட்டல் rs 350. எப்படி வேலைக்கு வேலைக்கு வருவார்கள். ஏல்& T தலைவர் யோசிக்கவேண்டும்.


N S Sankaran
பிப் 13, 2025 11:07

90 மணி நேரம் வேலை செய்ய சொன்னவரையே ketkavum.


Dv Nanru
பிப் 13, 2025 11:00

அரசின் நலத்திட்டங்கள் காரணமாக, தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு வேலை செய்ய வர மறுக்கின்றனர் அதனாலே என்ன சம்பளத்தை கூட்டிகுடுங்க விடுமுறையை அதிக படுத்துங்க அதை வீட்டுப்புட்டு வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?...எல் அண்ட் டி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியனுக்கு அவரோட மனைவியோட எதோ பிரச்சனை அதனாலே தான் அவர் வீட்டுக்கு போக மறுக்கிறார் அதை விட சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள் சரி அதே மாதிரி உலகத்தில் சில நாடுகள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்கிறார்களே அதற்க்கு என்ன உங்கள் பதில் என்னா சொல்லுங்க? ஏன் எல் அண்ட் டி க்கு வேலைக்கு வரமாட்டேங்குறாங்க தெரியுமா ஓவர் பிரஷர் நோ லீவு பொங்கல் தீபாவளி எப்போ பார்த்தாலும் வேலை அப்பறம் எவன் வேலைக்கு வருவான்..முதலில் உங்க சிஸ்ட்டத்தை சரி பண்ணுங்க, தமிழ்நாட்டில் பிறந்து விட்டு தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கவேண்டாம் சுப்ரமய்யன் அவர்களே ..


jayvee
பிப் 13, 2025 10:40

இது தொழிலாளர்கள் மட்டுமல்ல அதற்கும் மேலே மென்பொருள் என்ஜினீர்களும் வேலை செய்ய முன்வருவதில்லை ..அதிகம் சம்பளம் மட்டும் வேண்டும் ..ஆனால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முறையாக சரியான நேரத்தில் முடிக்க ஒத்துழைப்பதில்லை. வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.. பெரும்பாலான நிறுவங்களின் HR டிபார்ட்மெண்டில் ஊழல் ஓரவஞ்சனை பணம் பெற்றுக் கொண்டு சாதகமான செயல்பாடுகள் என்று அதிகரிப்பதும் இதற்க்கு காரணம்


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 09:48

தகுதி, திறமை வாய்ந்த தொழிலாளர்கள் இல்லை என்பதால் இவர்கள் நிறுவனத்தை பூட்டுப் போட்டுவிட்டு போய்விட முடியாது. முதலீடுகளை மனிதவளம் மலிவாகவும், திறமை வாய்ந்ததாகவும் இருக்கும் நாடுகளுக்கு மாற்றுவார்கள் ..... யாருக்கு நஷ்டம் ?


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 09:46

இவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லையே ? சில ஊடகங்கள் சர்ச்சைக்கருத்து என்று குறிப்பிட்டன .....


baala
பிப் 13, 2025 09:35

இலவசம் எவ்வளவு கொடுக்கிறார்கள். வருடத்திற்கு செலவு செய்யும் அளவுக்கு கொடுக்கிறார்கள்? இந்த தளத்தில் எவ்வளவு பேர் கருத்து எழுதுகிறார்கள், ஒரு செய்திக்கு எத்தனை முறை கருத்து எழுதுகிறார்கள் என்பதை பாருங்கள். சோம்பேறி எவ்வளவு பேர் என்பதை அறிவீர்கள்.


Saai Sundharamurthy AVK
பிப் 13, 2025 11:16

அரசியல், பொருளாதாரம், சமூகம், நாட்டின் நலம் போன்றவற்றில் அக்கறையுள்ளவர்கள் மட்டுமே கம்மெண்ட் போட முடியும். நாங்கள் வேலையை பார்த்துக் கொண்டே கமெண்ட் போடுகிறோம். கம்மெண்ட் போடுபவர்கள் எல்லாம் சோம்பேறிகள் என்று சொன்னால் கம்மெண்ட் போடும் நீங்கள் எப்படி ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை