லாரி மோதி 4 சிறுவர்கள் பலி
கட்சிரோலி: மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டம், கட்லி கிராமத்தின் அர்மோரி - கட்சிரோலி நெடுஞ்சாலை ஓரம், 12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் நேற்று அதிகாலை உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.