உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்: விசாரணைக்கு உத்தரவு

சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்: விசாரணைக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: சபரிமலையில் துவார பாலகர்கள் சிலையில் வேயப்பட்ட தங்க கவசங்களின் எடை 4 கிலோ வரை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அய்யப்பனை தரிசிக்கின்றனர். கோவில் திருமுற்றத்தில், அய்யப்பன் சன்னிதிக்கு முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு, 1999ம் ஆண்டில் தங்க கவசம் சார்த்தப்பட்டது. இவை, 40 ஆண்டுகள் வரை பழுது இல்லாமல் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், ஆறே ஆண்டு களுக்குள் கவசத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த, 1999ல் தங்க கவசத்தின் எடை 42.8 கிலோவாக இருந்த நிலையில், 2019ல் பழுது பார்ப்பதற்காக அகற்றி, சென்னைக்கு கொண்டு செல்லும் போது நான்கு கிலோ குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துவாரபாலகர் சிலையில் இருந்த தங்க கவசங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், சென்னையில் இருந்து அதை மீண்டும் கொண்டு வருமாறு சமீபத்தில் கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில்தான், தங்க கவசத்தின் எடை குறைந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு அதிகாரி களுக்கு கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SRIBALAJIANDCO
செப் 19, 2025 14:46

கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் வீட்ல சோதனை போட்டாலே 4 கிலோ தங்கம் கிடைச்சுடும்


ஆரூர் ரங்
செப் 19, 2025 14:25

முன்பு 20000 மூட்டை சர்க்கரையை தின்ற சென்னை எறும்புகள் இப்போ தங்கத்தை தின்றிருக்கும்.


raja
செப் 19, 2025 12:03

சேட்டன் மற்றும் சொர்ணாக்கா இருவரும் தங்க பிரியர்கள் என்பது அரபுநடுகளில் இருந்து தூதரக போர்வையில் கடத்தி வந்த பொழுதே இந்து கோயில்களின் தேவஸ்தானகள் உசார் ஆயிருக்க வேண்டும். மேலும் சென்னை கேட்கவே வேண்டாம் திருட்டு திராவிடர்களின் கோட்டை. ஏற்கனவே கோயில் நகைகளை உருக்கி புறங்கை நக்கிட்டு இருக்குறானுவோ. ம் ம் ஐயப்பனுக்கு தான் வெளிச்சம்....


M. PALANIAPPAN, KERALA
செப் 19, 2025 11:35

ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் பகவான் அய்யப்பனையும் விடவில்லை ஐயப்ப சங்கமத்திற்கு வேறு எந்த மாநிலமும் ஆந்திர, தெலுங்கானா, கர்நாடக ஆதரவு தராதபோது , தமிழ் நாடு மட்டும் ஆதரவு தந்திருப்பது வருத்தத்திற்கு உரியது.


கண்ணன்
செப் 19, 2025 09:14

தங்கத்தைக் கடத்திவரும் தொழிலில் ஈடுபட்டு வருவோரின் ஆட்சியில் இது அதிசயமில்லை


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 19, 2025 08:06

அய்யப்ப பக்தர்கள் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்வதாக அறிவிப்பு வந்தவுடனேயே மக்களுக்கு சந்தேகம் வந்து இருக்கிறது. தற்போது உண்மை என நிரூபணம் ஆகி விட்டது. சிவன் சொத்தை கொள்ளை அடிப்பது கை வந்த கலை. சாமியே சரணம் ஐயப்பா ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா


Gnana Subramani
செப் 19, 2025 07:44

மற்றவர்கள் செய்தால் திருட்டு.


அப்பாவி
செப் 19, 2025 07:43

சாமியே சரணம் ஐயப்பா...


Natarajan Ramanathan
செப் 19, 2025 07:15

தமிழகத்துக்கு அனுப்பினால் சேதாரம் இல்லாமல் திரும்ப வராது.


Venugopal S
செப் 19, 2025 07:50

செய்தியை முழுமையாகப் படியுங்கள், சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பே எடை குறைந்தது கண்டு பிடிக்கப்பட்டது!


மாபாதகன்
செப் 19, 2025 10:29

மாயம் எப்படி ஆகும். இதென்ன திருவிளையாடல் படமா?? பக்கா திருட்டு சம்பவம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை