உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் பீஹாரிகள்: சேர்ப்பது சரியா என காங்கிரஸ் கேள்வி; பொய்யான புகார் என நிராகரித்தது தேர்தல் கமிஷன்

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் பீஹாரிகள்: சேர்ப்பது சரியா என காங்கிரஸ் கேள்வி; பொய்யான புகார் என நிராகரித்தது தேர்தல் கமிஷன்

புதுடில்லி: பீஹாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியால், 65 லட்சம் பேர் ஓட்டுரிமையை இழக்கும் அபாயத்தில் இருக்கும்போது, தமிழகத்தில் 6.5 லட்சம் பீஹாரிகள் வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

நீக்கப்பட்டுள்ளன

கடந்த 2003ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியால், 65 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மரணம், நிரந்தரமாக இடம் பெயர்ந்தது, பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது போன்ற காரணங்களால் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பீஹாரில் இருந்து பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள 36 லட்சம் பேரும் இதில் அடங்குவர். இவ்வாறு புலம் பெயர்ந்தோர், அவர்கள் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது புலம்பெயர்ந்த 36 லட்சம் பேரில், ஏழு லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ளனர். அவர்களில், 6.5 லட்சம் பேர் விரைவில் தமிழகத்தில் ஓட்டுரிமை கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பீஹாரில் இருந்து வேலைக்காக தமிழகம் வந்த புலம்பெயர் தொழிலாளர்களை எப்படி தமிழக வாக்காளர்களாக மாற்றலாம் என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கூறியுள்ளதாவது

பீஹாரில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுரிமையை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவர்களில், 6.5 லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்கப் போவதாக வெளியாகும் தகவல், எச்சரிக்கை மணி அடிப்பது போல இருக்கிறது; இது மிகவும் ஆபத்தானது. புலம்பெயர் தொழிலாளர்களை நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என அழைப்பது, அவர்களை அவமதிக்கும் செயலாகும். தவிர, விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவது போன்றது. வழக்கம்போல மாநில சட்டசபை தேர்தலின்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பீஹார் அல்லது வேறு மாநிலத்திற்கு செல்ல மாட்டார்களா? சாத் பூஜை பண்டிகையின்போதெல்லாம் புலம்பெயர் தொழிலாளர்கள் பீஹாருக்கு செல்வதில்லையா? வாக்காளராக பதிவு செய்ய வேண்டுமெனில், அவருக்கு நிரந்தரமான வீட்டு விலாசம் அவசியம். பீஹாரில் புலம்பெயர் தொழிலாளருக்கு அப்படி நிரந்தரமான விலாசம் இருக்கிறதுஅப்படி இருக்கும்போது, பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எப்படி தமிழகத்தின் வாக்காளராக முடியும்? பீஹாரில் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிரந்தர வீடு இருக்கும் பட்சத்தில், அவர் தமிழகத்திற்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர் என எப்படி கருத முடியும்?

துஷ்பிரயோகம்

தேர்தல் கமிஷன் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. தேசத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முறைகளையும், தேர்தல் குணத்தையும் மாற்ற முயற்சிக்கிறது. தேர்தல் கமிஷனின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நிச்சயம் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேர்தல் கமிஷன் மறுப்பு

இதற்கிடையே, சிதம்பரம் தவறான தகவலை தருவதாக அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.'தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி இன்னும் துவங்கப்படாத நிலையில், எப்படி 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவர்? பீஹாரில் நடந்த வாக்காளர் திருத்தப் பணியை தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறானது. இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதை அவர் தவிர்க்க வேண்டும்' என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும்

பீஹார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து, 65 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். இது, தமிழகத்திற்கான நடவடிக்கையாகவும் மாறும். தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த, 70 லட்சம் பேர் தொழிலாளியாகவும், வியாபாரிகளாகவும் குடியேறி உள்ளனர். அவர்களை தமிழக வாக்காளர்களாக சேர்க்கும் செயல் திட்டமும் உள்ளது. இது குறித்து விரிவான விவாதம் நடந்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். - திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

V Gopalan
ஆக 05, 2025 15:09

How he was a Finance & Home Minister. In our country, any one to any where in nook and corner of the country can go get employment, business etc Let him say that he has no property in any of the States in our country other than Tamilnadu. It is a shame to call as Union Minister. Let him come and see in Karnataka as to how many are working, doing business in Karnataka Keralities spread all over World. Can he say that Keralites or public from Tamilnadu should be enrolled as a voter


Rajah
ஆக 04, 2025 18:57

இங்குள்ள தொழிலாளர்கள் டாஸ்மாக் போதைக்கு அடிமையாகிவிட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் அந்த வேலை வாய்ப்புளை எடுத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் இங்கு வேலை செய்வதால் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு வழி வகுக்கின்றது. பாஜக மீது பழிபோடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தமிழக தொழிலாளர்களை வேளையில் அமர்த்துவற்கு முயற்சி எடுக்கவும்.


Rajah
ஆக 04, 2025 18:48

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் முஸ்லீம், கிறிஸ்தவ பீஹாரிகள் என்றால் சமூகநீதி பேசுபவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் கேள்வியே எழுப்பியிராது. பீகாரில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளரக்ள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வாக்களிப்பவர்கள் என்று புலம்பும் காங்கிரஸ், திருமா போன்றோர் எப்படி அந்த வாக்குக்குள் பாஜகவுக்கு தமிழ் நாட்டில் சாதகமாக அமையும் என்று கூறுகின்றார்கள் என்பது புரியவில்லை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 04, 2025 17:59

இங்கு பெங்களூரில் 23 லட்சம் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என்று தமிழர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் கமிஷனால் வழங்க பட்டிருக்கிறது....இதே போன்று மும்பை, டெல்லி என்று இந்தியா முழுவதிலும் உள்ள தமிழர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கிறார்கள்.... இவர்களை தகுதி இல்லை என்று தமிழ்நாட்டிற்கு அனுப்பி விடலாமா ??? என்ன அறிவு கெட்டதனமான பேச்சு.....இந்த அறிவாளி தான் ராணுவ அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த போது என்ன என்ன கோமாளித்தனமான உத்தரவுகளை போட்டாரோ.....நம் நாட்டு நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன..... மிக்சர் சாப்பிடுகின்றனவா ???


Saai Sundharamurthy AVK
ஆக 04, 2025 17:26

ராகுல், பிரியங்கா எல்லாம் வயநாடு வந்து போட்டியிடலாம். ஆனால், பிகாரி தமிழர்கள் இங்கு வந்து வாக்களிக்க கூடாதா ????


சங்கி
ஆக 04, 2025 15:21

இதில் என்ன தப்பு? அவனுககிட்டேஇருந்து வேலை மட்டும் வாங்கணும். ஓட்டுரிமை இல்லியா? தமிழர்களும் மற்ற மாநிலங்களில் வாழ்கிறார்கள் , ஓட்டளிக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு இங்கேயும் நிரந்தர வீடு உள்ளது. அப்படியிருக்க வடமாநிலத்தவர்களுக்கு மட்டும் ஏனிந்த ஓரவஞ்சனை


SUBRAMANIAN P
ஆக 04, 2025 14:44

தினமலர் , துக்ளக் இங்கே பிஜேபிக்காக வேலை செய்யுது.


சங்கி
ஆக 04, 2025 15:27

செஞ்சா என்ன தப்பு? தமிழ்நாட்டில் எல்லா ஊடகங்களும் திருட்டு திமுகவுக்கு ஒத்தூதலயா?


vivek
ஆக 04, 2025 15:32

ஏல நீ அந்த ......கைக்கூலிதானே


SUBRAMANIAN P
ஆக 04, 2025 17:33

ஏலே விவேக்கு, என்னோட கமெண்ட் ஒன்னு கீழ இருக்கு பாருல.. முட்டாப்பயலே.. சங்கியா கூட இரு.. ஆனா சொங்கியா இருக்காதல....விவேக்கு..


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2025 14:41

சிவகங்கை பையன் எப்படி காபினெட் அமீச்சரா இருந்தான்னு சந்தேகமா கீதுபா ........


M S RAGHUNATHAN
ஆக 04, 2025 14:40

இந்த ஆள் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஆக இருந்தவன். பங்களாதேசம், பர்மா நேபாளத்தில் இருந்து கள்ளத்தனமாக குடியேறியவர்கள் இந்தியர்களா ? அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுப்பது, இருப்பது சரியா ? The onus of proving your nativity lies with you, if any doubt arises about your stay, irrespective whether you hold Aadhaar, Pan card or Driving license. It was during the Congress rule that Velu Pillai Prabhakaran LTTE CHIEF got a driving license in Bihar. Please confirm Mr Chidambaram. You were a former HOME MINISTER of this country.


M S RAGHUNATHAN
ஆக 04, 2025 14:34

சிதம்பரம் அவர்களுக்கு அவருடைய கண்டனூர் புது வயலில் ஓட்டுரிமை இருக்கிறது. ஆனால் அவர் வசிப்பது சென்னையில் அல்லது புதுடெல்லியில் அல்லது மும்பையில்..ஒரு வேளை மற்ற மூன்று இடங்களிலும் இவரது பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்தால் அவை நீக்கப் படவேண்டுமா இல்லையா ? மெத்த படித்த மேதாவி பதில் சொல்ல வேண்டும்.