உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி; 30 பேர் காயம்

காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி; 30 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cxwo7uyr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்தில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவது இடம் பெற்றுள்ளது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போது விபத்து நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.விபத்து நிகழ்ந்த பகுதி சீல் வைக்கப்பட்டதால், மோப்ப நாய்களுடன் பாதுகாப்புப் படையினர் வளாகத்தைச் சுற்றி வளைத்தனர். ஸ்ரீநகர் துணை கமிஷ்னர் அக்ஷய் லப்ரூ உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார். ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில், வெடி விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sivakumar Thappali Krishnamoorthy
நவ 15, 2025 12:27

குண்டு வெடிப்பை கண்டிக்க எதிர் கட்சிகளுக்கு துப்பு இல்லை ..கேவலமான கட்சிகள் .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2025 11:03

இதை பாரதத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகத்தான் பார்க்க வேண்டும் ......


Kannan Chandran
நவ 15, 2025 10:56

"நாளை பீகார் தேர்தல் இன்று டெல்லியில் குண்டுவெடிப்பு" என பதிவிட்ட கீழ்த்தரமான திராவிட அரசியல் வியாபாரிகளின் பதில் இதற்கு இன்னும் வரவில்லை..


Apposthalan samlin
நவ 15, 2025 10:36

எந்த முட்டாளாவது வெடிகுண்டை கொண்டு போலீஸ் ஸ்டேஷன் இல் வைபானா அடிப்படை அறிவு கூட இல்லை .


தமிழ்வேள்
நவ 15, 2025 10:19

தமிழகம் மேற்கு வங்காளம் கேரளா போன்ற கடலோர எல்லையோர மாநிலங்களுக்கு தனி சட்டம் தேவை.இங்கு போலீஸ் ரெவின்யூ மற்றும் கோவில்கள் கல்வி மத்திய அரசு கன்ட்ரோலில் இருக்க வேண்டும்.....


Gnana Subramani
நவ 15, 2025 12:25

குஜராத் மகாராஷ்டிரா ஒடிஷா கடலோர மாநிலங்கள் இல்லையா. அங்கு பாதுகாப்பு தேவை இல்லையா


Ramesh Sargam
நவ 15, 2025 10:15

டெல்லி சம்பவத்தை திசை திருப்ப அந்த பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் இப்படி செய்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு, ஓடவிட்டு, என்கவுண்டர் செய்யப்படவேண்டும்.


Ram
நவ 15, 2025 08:45

பொதுமக்களின் வாகனத்தை தேவையில்லாமல் பறிமுதல் செய்து பாதுகாப்பற்ற முறையில் வைப்பதைப்போல் வைத்திருப்பார்கள் , கொஞ்சம்கூட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் … இனிமேலாவது திருந்தானும்


karupanasamy
நவ 15, 2025 08:31

பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்கவேண்டுமென்றால் நம்முடைய பாதுகாப்பு நம்கையில் தான் உள்ளது


N S
நவ 15, 2025 08:15

அசம்பாவிதம். பாதுகாப்புடன் கையாளப்படவேண்டிய பொருட்களை ஏன் காவல் நிலையத்தில் வைத்து செய்தார்கள்? நிச்சயமாக இறந்த உயிர்கள் வெகுமதிப்புடையவை. ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்.


Kannan Sundaram
நவ 15, 2025 08:13

நீலி மற்றும் முதலை கண்ணீர் மற்றும் டன் டன்னாக வடிப்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை