உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு

டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு மிக்க டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வது நுழைவு வாயில் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. குண்டுவெடித்ததால், காரில் இருந்த பாகங்ள் 300 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x8c6jd36&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து டில்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

என்ஐஏ விரைவு

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பிரதமர் ஆலோசனை

டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.

மெதுவாக சென்ற காரில்

டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது: செங்கோட்டை அருகே இன்று மாலை 6:52 மணிக்கு மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் குண்டுவெடித்தது. அப்போது அங்கு சிலர் இருந்தனர். அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. டில்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி, தடயவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடக்கிறது. கூடுதல் தகவல் கிடைத்ததும் பகிரப்படும். சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

bharathi
நவ 10, 2025 22:01

cowards


s.murali
நவ 10, 2025 22:00

RIP


தமிழ்வேள்
நவ 10, 2025 21:54

மூர்க்க பன்றிகளின் கை வரிசை தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை...சீனா உய்குர் மாநிலத்தில் நடத்துவது போல மூர்க்கத்தை கருவறுத்தால் மட்டுமே இங்கு அமைதி நிலவும்... உலகில் எங்கு சென்றாலும் தங்கள் அமைதியை தாங்களே கெடுத்துக் கொள்ளும் முதலை மூளை கூட்டம்.. ஒன்று காஃபிர் மும்மீன் சண்டை.. இல்லை என்றால் ஷியா சன்னி பஞ்சாயத்து..எதுவும் கிடைக்கவில்லை என்றால் சன்னி கும்பலுக்குள்ளேயே, எந்த ஹதீஸ் சரியானது- என்று வெட்டு குத்து... என்ன டிசைன் டா இது? மதரஸாக்கள் முற்றிலும் மூடப்பட்டால் தவிர வன்முறை குறையாது..


Kulandai kannan
நவ 10, 2025 21:53

பாஜக ஆட்சியில் முதல்முறை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.


ஆரூர் ரங்
நவ 10, 2025 21:49

சிலிண்டர் வெடிப்பு ன்னு பொய் சொல்லி மறைக்கவில்லை?


Kudandhaiyaar
நவ 10, 2025 21:47

உங்களை கண்காணிப்பதும் காங்கிரசை கண்காணிப்பதும் ஒன்றே அதற்கு ஒரு உளவுத்துறையை பத்தவில்லை என்ன செய்வது


அருண், சென்னை
நவ 10, 2025 21:47

S.I.R effect, பெயர் நீக்கம் வேலை செய்யுது...பங்களாதேஷி, ISIS வேலை செய்யுது...யாரோ கேடாய்ங்க இது பிஜேபி ஆட்சி நடத்தும் லட்சனம்...இங்கும் அரசியல் ஆதாயம் தேடுறது...உயிர் இழந்தவர்களின் குடும்ப வேதனையை யோசித்து பாருங்கள்..இன்று காலை 2000kg வெடிபொருட்கள் பிடித்திருக்கிறார்கள்... அதையும் கண்டுபிடிக்காமல் இருந்தால் நம் நாட்டின் கதி என்ன? ஒரு சிலர் அரசியல் கருத்து போட்டதினால்... இப்படி என்றாவது இதற்கு முன்பு khan-cross ஆட்சியில் முன்பே கண்டுபிடித்தது உண்டா? உயிர் பலி பற்றி யோசியுங்கள்... இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை...terrorists உதவாகரைகளின் ஆட்டம் என்றுதான் உலகில் அழியுமோ தெரியல...


Nandakumar Naidu.
நவ 10, 2025 21:44

ஒன்றும் இல்லை பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இருந்து பாதிக்கும் கீழே கொண்டு வர வேண்டும். சீனா உம் மூடிக்கொண்டிருக்கும்,பாகிஸ்தானும் மூடிக்கொண்டிருக்கும். மீண்டும் வாலாட்டினால் உலக வரைபடத்தில் இருந்து பாக்கிஸ்தான் இருக்க கூடாது.


Araul
நவ 10, 2025 21:41

may be over ethinal mixed is' may be scientific reason ithervise hybrid ( petrol and cng),


Ramesh Sargam
நவ 10, 2025 21:39

இது அவர்கள் செயலாகத்தான் இருக்கும். அது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் ஒரு Surgical Strike அல்லது Operation Sindoor நடத்தி Pakistan தேசத்தை முற்றிலும் அழிக்கவேண்டும். பொறுத்தது போதும், பொங்கி எழு .


சமீபத்திய செய்தி