உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / படைவீரர்கள் பாசறை திரும்பும் வண்ணமிகு விழா: டில்லியில் கோலாகலம்

படைவீரர்கள் பாசறை திரும்பும் வண்ணமிகு விழா: டில்லியில் கோலாகலம்

புதுடில்லி: குடியரசு தினவிழாவில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு, வண்ணமிகு அணிவகுப்புடன் அரங்கேறியது. டில்லி விஜய் சதுக்கத்தில் நடந்த நிகழ்வை, பல்லாயிரக்கணக்கான பேர் கண்டு ரசித்தனர்.

நாட்டின் 76வது குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்வு டில்லி விஜய் சவுக்கில் நடந்தது. வண்ண உடை அணிந்த முப்படை வீரர்கள், வாத்திய இசைக்கு ஏற்ப அணிவகுத்துச் சென்றனர். ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினரின் அணிவகுப்பு, கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. ஆயுதக் காவல் படை இசைக்குழுக்கள் ரசிக்கத்தக்க பல பாடல்களை இசைத்தனர். இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட பலர் நேரில் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை