உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வழியில் ஆம் ஆத்மி அரசு: பஞ்சாபில் புல்டோசர் அதிரடி

பா.ஜ., வழியில் ஆம் ஆத்மி அரசு: பஞ்சாபில் புல்டோசர் அதிரடி

சண்டிகர்: பஞ்சாபில், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வீடுகளை, 'புல்டோசர்' வைத்து ஆம் ஆத்மி அரசு இடித்து தள்ளியது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால், குற்றங்களும் அதிகரித்துஉள்ளன. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த வாரம், போதை பொருள் கடத்தல்காரர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 5 கிலோவுக்கும் அதிகமான 'ஹெராயின்' பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் மாபியாக்களாக செயல்பட்டு வரும் சோனு மற்றும் ராகுல் ஹன்ஸ் ஆகியோருக்கு சொந்தமான பங்களாக்களை புல்டோசர் வைத்து பஞ்சாப் போலீசார் இடித்து தள்ளினர்.கடந்த மூன்றாண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வரும் சோனு, சட்டவிரோதமாக கட்டிய பங்களாவை போலீசார் நேற்று முன்தினம் இரவு இடித்தனர். மற்றொரு சம்பவத்தில், லுாதியானாவில் உள்ள கடத்தல்காரர் ராகுல் ஹன்சின் வீட்டை போலீசார் நேற்று இடித்து தள்ளினர்.சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் வைத்து இடிக்கும் நடவடிக்கையை உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் பா.ஜ., அரசு செயல்படுத்தியது. இதை ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன. ஆனால், பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க, அதே அதிரடியை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு ஆம் ஆத்மி தள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
பிப் 26, 2025 18:59

ஆமா ஒங்க முதல்வர் ஒண்ணாம் நம்பர் குடிகாரன் என்று பேப்பரில் வருகின்றது அப்போ அந்த வீட்டையும் புல்டோசர் கொண்டு இடிக்கபோகிண்றீர்களா??சே சே அவர் குடிக்க மட்டும் செய்கின்றார் ஆனால் விற்பனை செய்வதில்லை??? வெறும் விற்பனைக்கு அனுமதி அளிப்பதால் இந்த ஆட்சியில் அவர் வீட்டை இடிக்க முடியாது


abdulrahim
பிப் 26, 2025 13:50

குஜராத்ல எப்படா இடிக்க போறீங்க ? இந்தியாவின் போதை பொருள் நுழைவு வாயில் அந்த குதானியின் குந்த்ரா துறைமுகம் தானே சாணிகள் இதை பற்றி வாய் திறப்பானுங்களா ? ரெண்டு ரூவா கூலி தமிழகத்தை கரிச்சு கொட்ட மட்டும்தான் தரப்படுகிறது போல..


visu
பிப் 26, 2025 15:53

கடத்தறதெல்லாம் நீங்க தானேடா பாகிஸ்தான்ல இருந்துதான் வருது வேனும் என்றால் இனி டெலிவரி சென்னைக்கு அனுப்ப சொல்லிடலாம்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 26, 2025 13:48

இங்கே பலராலும் திமுக வைத் தாண்டி வேற எதுவும் யோசிக்க முடியவில்லை. பரிதாபங்கள்.


Ramesh Sargam
பிப் 26, 2025 13:07

தமிழகத்தில் மாறாக போதைப்பொருள் கடத்தல் மன்னர்களுக்கு புதுசா மக்கள் வரிப்பணத்தில் வீடுகள் கட்டிக்கொடுப்பார்கள் திமுக ஆட்சியாளர்கள்.


வாய்மையே வெல்லும்
பிப் 26, 2025 10:41

மூர்க்கன்ஸ் ஒரு படி மேல போயிட்டு கஞ்சா விற்பவனுக்கு ஆரத்தி எடுத்து பூச்செண்டு கொடுத்து அழகு பார்ப்பார்கள். கொல்லைப்புறத்தில் துட்டு வந்தால் எல்லாம் சரியே


mindum vasantham
பிப் 26, 2025 09:49

திமுக வினர் ....ஆக மாறி வருகின்றனர்


malar mannan
பிப் 26, 2025 08:41

குற்றவாளிகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டிய கட்டிடங்களை மூர்க்கத்தனமாக இடித்துத் பதிலாக அவற்றை ஏலம் விட்டு அனாதை இல்லங்களுக்கு தரலாமே.


Ramamoorthy
பிப் 26, 2025 08:22

அப்படியே அந்த சார் வீட்டையும் புல்டவுசர் வச்சு இடித்தால் நன்றாக இருக்கும் கொள்ளையடித்து சம்பாதிச்ச வீடு


Ramamoorthy
பிப் 26, 2025 08:21

அப்படியே அந்த சார் வீட்டையும் இடித்தால் நன்றாக இருக்கும் அவர் கொள்ளையடித்து கட்டின வீடு


m.arunachalam
பிப் 26, 2025 08:20

இதைவிட சிறந்த முடிவு இல்லை . மொத்த அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யா வேண்டும் . இதில் குற்றவாளிகள் சார்பாக ஆஜராகும் வக்கீல்கலுக்கும் தண்டனை கொடுக்க வலி காண வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை