வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படியே ஒரு சுற்று தமிழ்நாடு வரவும்
புதுடில்லி: போதைப் பொருள் கட்டுப்பாடு ஏஜென்சியின் (என்சிபி) வட கிழக்கு மாநிலங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரலாக உள்ள சுதாகர், சென்னையின் என்சிபி துணை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.2003-ம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஆர். சுதாகருக்கு, தெற்கு மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் பதவியை வகிக்க முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.சுதாகர், தற்போது அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் வடகிழக்கு பிராந்திய டிடிஜியாக உள்ளார். இவர் தமிழகத்தில் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் மற்றும் கோவை மேற்கு மண்டல ஐஜி உட்பட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.என்சிபியின் புதிய பணியில், அவர் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருப்பார்.
அப்படியே ஒரு சுற்று தமிழ்நாடு வரவும்