உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு

தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டத்தில் அக்கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.லோக்சபா தேர்தலில் 294 இடங்களை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இக்கூட்டணிக்கு சில சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.Galleryஇந்நிலையில், பழைய பார்லிமென்ட் வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், பாஜ., தலைவர் நட்டா, லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித்பவார், பட்னாவிஸ், பா.ஜ., மாநில முதல்வர்கள், மாநில பாஜ., முதல்வர்கள், ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வந்த போது அனைவரும் எழுந்து நின்று ‛ மோடி.. மோடி...' கோஷம் போட்டனர். பிறகு , அங்கு வைக்கப்பட்டு இருந்த அரசியல்சாசன புத்தகத்தை கையில் ஏந்திய மோடி, தொடர்ந்து அதனை அங்கு வைத்துவிட்டு தலைவணங்கினார்.

தேர்வு

இந்த கூட்டத்தில் தேஜ., கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

வரலாற்று சாதனை

இந்தக் கூட்டத்தில் பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா பேசியதாவது: தேஜ கூட்டணி உட்பட அனைத்து தலைவரின் சார்பிலும் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சேவைக்காக பிரதமர் மோடி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.ஒடிசாவில் முதன்முறையாகவும், அருணாச்சல பிரதேசத்தில் 3வது முறையாகவும் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. 3வது முறை வெற்றி பெறுவது வரலாற்று சாதனை. யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வளர்ச்சியை இந்தியா பார்த்து உள்ளது. அனைவருக்கும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற உயரிய நோக்கத்துடன் பாஜ., கூட்டணி அரசு எப்போதும் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்

நிர்பந்தம் அல்ல

பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: 18 வது லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்பி.,க்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடியின் உழைப்பே காரணம். தேஜ கூட்டணி கட்சிகள் ஒரே குடும்பமாக இருந்து ஆட்சியையும் , நாட்டையும் வழிநடத்தும். பா.ஜ., கூட்டணி அரசு மீண்டும் அமைவது என்பது நிர்பந்தம் அல்ல. தேசத்திற்கான கடமையாகும். இந்தக்கூட்டணி நிபந்தனையில் உருவானது அல்ல.பாஜ அரசு அமையும் விவகாரத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. தேஜ கூட்டணி அரசுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. 1962க்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேஜ கூட்டணிக்கு கிடைத்துள்ளது. பா.ஜ., கூட்டணியின் பார்லி குழு தலைவராக மீண்டும் மோடியை முன்மொழிகிறோம். இவ்வாறு அவர் பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று மோடி, மோடி என கோஷம் போட்டனர்.

மக்களின் ஆசி

பிறகு, பிரதமராக மோடியை பிரதமராக்க வேண்டும் என ராஜ்நாத் முன்மொழிந்ததை, வழிமொழிந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: காஷ்மீர் முதல் குமரி வரை மக்களின் ஆசியுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
ஜூன் 07, 2024 17:08

பாராட்டுக்கள் அதே நேரத்தில் மாநிலங்களுக்கெல்லாம் ஆளுநர்களை நியமித்து வந்த மத்திய அரசுக்கு 2 மாநில அரசுகள் தாங்களே ஆளுநராகளாக வந்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்தால் நன்றாக இருக்கும். இதர எதிர்க்கட்சிகள் , பொது குறைகளைக் களைவதில் முழு கவனம் செலுத்தி நல்வழிப்படுத்தவேண்டும் என்பது மக்கள் விருப்பம் . நாட்டு மக்களுக்கு இந்த மூவர் அணி , எதிர்க்கட்சிகளுக்கு இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க வந்திருக்கும் புதிய அணி நவீன அஷ்ட்டதிக் பாலகர்கள் ஓய்வுபெற்ற 7 அரசு ஊழியர்கள் அவர்களுக்கு தலைமை தங்கும் ஓய்வு பெற இருக்கும் மற்றொரு அரசு ஊழியர் இருக்க எந்த ஒரு பயமும் இல்லை. வந்தே மாதரம்


Maharajagadai Radhakrishnan
ஜூன் 07, 2024 13:11

நல ல ஆட்சி தருக வணக்கம்


Ramanujadasan
ஜூன் 07, 2024 12:50

ஹூம் , சந்தோஷமாக , உற்சாகத்துடன் கொண்டாடவேண்டிய நாம் இப்போது சிறிது குறைந்த சந்தோஷத்துடன் , உற்சாகத்துடன் கொண்டாட போகிறோம் . இன்னும் ஒரு முப்பத்தி ஐந்து இடங்கள் ஜெயித்து இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும் . வெறும் ஆறு லக்ஷ வாக்குகளில் முப்பத்தி இரண்டு இடங்களை இழந்து விட்டோம் என்பது சோகம்


Narayanan narasimhan
ஜூன் 07, 2024 12:36

சீரிய நல்லாட்சியைத் தருக. கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி