உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது: 241 பேர் உயிரிழந்த சோகம்!

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது: 241 பேர் உயிரிழந்த சோகம்!

ஆமதாபாத்: ஆமதாபாத் : குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானம், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மதியம் 1.17 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=geq7e53c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் உயிர் இழந்துவிட்டதாகவும், விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.விரைந்தார் விமான போக்குவரத்து துறை அமைச்சர்! ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விரைந்தார்.விமான நிலையம் மூடல்!242 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளான ஆமதாபாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலையம் நிர்வாகம் அறிவித்துள்ளது.பிரதமர் மோடி ஆலோசனைபயணிகள் விமான விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் முன்னாள் முதல்வர் கதி என்ன?விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் செய்துள்ளார். அவரும் உயிர் இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை இன்னும் குஜராத் அரசு உறுதி செய்யவில்லை.டிஜிசிஏ விளக்கம்ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டிஜிசிஏ தெரிவித்து உள்ளது.இந்தியர்கள் 169 பேர் பயணம்ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விபத்துள்ளான விமானத்தில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனை சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர் இருந்துள்ளனர். இரு விமானிகள், 10 பணியாளர்களும் விமானத்தில் பயணித்துள்ளனர்.இங்கிலாந்து அரசு வருத்தம்ஆமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்தோம். இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். விபத்தில் சிக்கிய பிரிட்டனை சேர்ந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.தொழிலதிபர் கவுதம் அதானி அறிக்கைஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது குறித்து தகவல் அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அனைத்து அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.போலீஸ் அதிகாரி சொன்னது என்ன? விமான விபத்து குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டாக்டர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சில நிமிடங்களில் போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

241 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி மீது விழுந்து நொறுங்கிய விபத்து ஏற்பட்டது. கேன்டீனில் உணவுப்பொருட்கள் சிதறி கிடக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.மனதை நொறுக்கிய பேரழிவு!ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இது மனதை நொறுக்கிய பேரழிவு ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் தேசம் துணை நிற்கிறது என ஜனாதிபதி திரவுபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார்.பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி!பிரிட்டன் பிரஜைகளுடன் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் உறவினர்களை எண்ணி வேதனைப்படுகிறேன். பிரதமர் மோடி வேதனைஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது; வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை நொறுக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன்.காங்கிரஸ் எம்.பி. ராகுல் இரங்கல்ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து இதயத்தை உடைக்கிறது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்கள் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ananda Raman
ஜூன் 19, 2025 19:13

I.verey.sad


Subramanian
ஜூன் 12, 2025 19:23

மிகவும் துயரமான செய்தி. இறந்தவர்கள் ஆன்மா சத்கதியடைய பிரார்த்தனை. ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...


தாமரை மலர்கிறது
ஜூன் 12, 2025 19:07

பயங்கரவாதிகளின் சதிச்செயல்?


ANNADURAI MANI
ஜூன் 12, 2025 18:55

வருத்தமான செய்தி. முறையான விசாரணை தேவை


Kasimani Baskaran
ஜூன் 12, 2025 18:54

முழு அளவில் எரிபொருள் இருந்திருக்கும். எரிபொருளை கொட்ட நேரம் இருந்து இருக்காது. விமானம் மேலெழும்பாமல் கீழே போவதைப்பார்த்தால் என்ஜின் அல்லது இறக்கை கட்டுப்பாட்டில் தொழில் நுட்ப கோளாறு போலத்தான் தெரிகிறது. நாசவேலை காரணமா என்பது பிளாக் பாக்ஸ் ஆய்வுக்குப்பின்தான் தெரியவரும்.


mohan
ஜூன் 12, 2025 17:49

விமான நிலைய பாதுகாப்பு கூர்நோக்கு படவேண்டும். பனி புரியும் ஊழியர்களின் உண்மைத்தன்மை அறிய படவேண்டும். எல்லா விமானிகளும், மன அழுத்தம் இள்ளாமலும் , அவசரமில்லாமல் இருக்கவேண்டும். எவ்வளவு அனுபவம் இருந்தாலும், ஒவ்வொரு தடவையும், அணைத்து செக் பாய்ண்ட் அவசியம், அணைத்து விமானிகளும், முன்கூட்டி தேதி இடைப்பட்ட பராமரிப்பு ஓவர் காலிங் டைம் பின் பற்ற படவேண்டும். 787 பெய்லியர் ஆவதற்கு சந்தர்ப்பம் மிக குறைவு.. விபத்து பற்றி எல்லா வகையிலும் ஆழ்ந்த விசாரணை தேவை. அணைத்து வாயில்களிலும் செக்யூரிட்டி செக் மிக அவசியம். தெரிந்த விமானி, தெரிந்த பனி ஆள் என்று , எந்த சோதனையும் இல்லாமல் , விமான நிலையத்திற்குள் அனுமதிக்க கூடாது. விமானத்தை சுற்றி ஏதாவது ஒரு வகையில் வேற்று ஆள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளேவரத அளவிற்கு பாதுகாப்பு பல படுத்த வேண்டும். விமானத்தின் ஏற்றப்படும், ஆட்கள், மற்றும், அணைத்து பொருள்களும், நிர்ணயிக்க பட்ட அளவுகளுக்கு மேல் இருக்க கூடாது. ஒரு தடவை, சிங்கப்பூர் டு கொழும்பு ஏற்ப்ஸ் விமானத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவின் பக்கத்தில் எடை ஏற்ற பட்டதாக கேள்வி பட்டே ன் .. சற்று குறைவாக இருப்பது அசியம். .


Kasimani Baskaran
ஜூன் 12, 2025 17:28

இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமுற்றோர் நலமடைய பிரார்த்தனைகள்.


Gopalan
ஜூன் 12, 2025 17:22

Boeing planes are to be discarded. All American aircrafts must be d with Indian made aircrafts in future. Their service costs are too high. Anyhow the possibility of sabotage by terrorists must be ascertained.


என்றும் இந்தியன்
ஜூன் 12, 2025 17:12

143 உடல்கள் மீட்கப்பட்டதாக இப்போது படித்தேன் மொத்தம் அதில் இருந்தது 242 பேர் பணியாளர்களையும் சேர்த்து. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், மிகவும் வேதனையாக இருக்கின்றது. இந்த விபத்தின் காரணம் என்ன??? புறப்பட்ட சில மணிநேரம் / நிமிடத்தில் விமானம் விபத்துக்குள்ளானால் அது நிச்சயம் யாரோ இதை பிளான் செய்து நடத்தியிருக்கின்றார்கள் என்று அர்த்தம். பிளேன் கிளம்பும் முன் எல்லா வித safety யுடன் பிளேன் உள்ளதா என்று சோதித்து தான் அந்த பிளேன் செல்ல அனுமதிப்பர். இது தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை.


Abdul Rahim
ஜூன் 12, 2025 16:57

மிகவும் துயரமான செய்தி, இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலான வார்த்தைகளால் அனைவரும் துணை நிற்போம் ...


SUBBU,MADURAI
ஜூன் 12, 2025 17:11

An Air India flight to London crashed after takeoff from Ahmedabad, with 242 onboard. The aircraft involved is a Boeing 787-8 Dreamliner.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை