வாசகர்கள் கருத்துகள் ( 32 )
எல்லா நாய்களையும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்பது சரியானது. ஆனால் அவற்றை மீண்டும் தெருவில் விடாமல் வேறொரு தங்குமிடத்தில் விட வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. காரணம் பள்ளிகள் கட்ட கூட வசதி இல்லாத இந்த நாட்டில், நாய்கள் தங்க வசதிகள் எங்கு ஏற்பாடு செய்யப்போகிறார்கள்? அந்த நாய்களுக்கு யார் சாப்பாடு போட போகிறார்கள். வெறுமனே அந்த நாய்களை விஷஊசி போட்டு கொல்ல போகிறார்கள் என்பது தான் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. சிலருக்கு இந்த உண்மை தெரியும். பலருக்கு தெரியாது. அதனால் அவர்கள் இந்த தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். உண்மை தெரிந்த சிலர் கண்ணை மூடிக்கொண்டு தனது பிரச்சனை ஒழிந்தால் போதும் என்று நினைத்து நாய் இனத்தை ஒழிக்க நினைத்தால், கால பைரவர் சும்மா விடமாட்டார்.
மாட்டுத்தீவன ஊழல் தந்தை, சர்க்காரியா குறிப்பிட்ட அறிவியல் பூர்வ ஊழல் தந்தை, அவர்கள் காட்டிய பாதையில் அப்பப்பா என "இன்டி ஆன்டி" ஆட்சியாளர்கள் இந்த முள்வேலி திட்டத்தையும் நாய்களுக்கு உணவளிக்க தனி வாரியம் அமைத்தும் கொண்டாடி மகிழ்வார்கள்.
என்ன செலவு பிடிக்கும் என்று தெரியுமா? வேலி அமைக்க ஒப்பந்ததாரர்கள் நியமித்தால், எவ்வளவு பணம் வேலி அமைக்க பயன்படும் என்பது நீதிபதிகளுக்கு தெரியாதா? அதுவும் கருத்தடை செய்த நாய்களை பாதுகாப்பான இடத்தில் விட வேண்டுமாம். மற்ற உயிரினங்களுக்கு கேடு என்று தெரியாதா? நானே பார்த்து இருக்கிறேன் கிண்டி மான் பாதுகாப்பு வனத்தில் நாய்கள் கடித்து எத்தனை மான்கள் உயிர் விட்டு இருக்கின்றன. பொது மக்களுக்கு பாதுகாப்பு தேவை, தெரு நாய்களுக்கு அல்ல. பேசாமல் தெரு நாய்களை நீதி மன்றத்தில் விட்டு விடுங்கள. பிறகு தான் நீதிபதிகளுக்கு மக்கள் பிரச்னை புரியும்.
உங்களுக்கு என்னபா அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விடும். எங்களின் தெருக்களில் வசிக்கும் தெரு நாய்கள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.
நீட்டிபட்டிகளையோ, அவர்களது குடும்பத்தாரையோ வெறிநாய் கடித்து வீட்டில் உயிரிழப்பு ஏற்படாதவரை அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் .....
கும்பகோணம் அருகே 3 நாய்கள் கடித்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 52 கோழிகள் உயிரிழந்தன.
மிகவும் தேவையான ஒரு தீர்ப்பு கோடி நமஸ்காரங்கள் இந்த தீர்ப்பை சொல்லியவருக்கு
கட்டிங் கமிஷனுக்கு நல்லதோர் திட்டம் கெடச்சாச்சு என்ஜாய்
செருப்புக்கு பதிலா கால்களை வெட்டச் சொன்ன கதையா இருக்கு! இங்கு வெறிபிடித்த மனிதர்களை கூட என் கவுண்டரில் போடலாம். ஆனால் வெறிபிடித்த நாய்களை போட முடியாது. ஒரே நாளில் இறைச்சிக்காக ஆயிரக்கணக்கில் ஆடு, மாடுகள் வெட்டப் படுகிறதே அதெல்லாம் உயிர்கள் இல்லையா? இதைக் தட்டிக் கேட்க நாய் ஆர்வலர்கள் போல் ஆடு ஆர்வலர்கள், மாடு ஆர்வலர்கள் என யாருமே இல்லையா?
நாட்டில் சில இடங்களில் மனிதனுக்கே தங்குவதற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு உன்பதற்கு வழியில்லை இதில் இது வேறு
இந்தியாவில் இருக்கும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யலாம்...அந்நிய செலாவணியும் கிடைக்கும்..நம் நாட்டிற்க்கும் நிம்மதி.