உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலங்கையின் புலிகள் அமைப்பை புனரமைக்க கராச்சிக்கு ஹவாலா மூலம் நிதி அனுப்பியது அம்பலம்

இலங்கையின் புலிகள் அமைப்பை புனரமைக்க கராச்சிக்கு ஹவாலா மூலம் நிதி அனுப்பியது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புலிகள் அமைப்பின் செயல்பாடுகளை இந்தியாவில், மீண்டும் புனரமைப்பதற்காக, போதை மருந்து கடத்தலில் கிடைத்த பணம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவிலும் இலங்கையிலும் புலிகள் அமைப்பை, மீண்டும் புனரமைக்க ஏதுவான நடவடிக்கைகளை, யாராவது எடுத்து வருகிறார்களா என்பது குறித்து, என்.ஐ.ஏ., தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2022, மார்ச் 15ல், இலங்கையைச் சேர்ந்த குணா, புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா உட்பட 10 பேர், தமிழகத்தின் திருச்சியில் உள்ள சிறப்பு தடுப்பு காவல் மையத்தில் ஒன்றுகூடி, ஆலோசனை கூட்டம் நடத்தினர். இவர்கள் அனைவருக்குமே, நோக்கம் ஒன்றாக இருந்துள்ளது. குற்றப்பத்திரிகை போதை மருந்து மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றை கடத்துவதன் மூலம், மிகப்பெரிய அளவில் பணத்தை திரட்ட முடியும். அந்த பணத்தைக் கொண்டு, புலிகள் அமைப்பை, புனரமைக்கும் நடவடிக்கைகளை துவங்கலாம் என்று, அந்த கூட்டத்தில் திட்டமிட்டுள்ளனர். இந்த சதிச்செயலை கண்டுபிடித்து, இவர்கள், 10 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2023 ஜூனில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டை விலக்கிக் கொண்டு தன்னை விடுவிக்கும்படி, குணா என்ற குணசேகரன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த அக்டோபர் 17ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த தேசிய புலனாய்வு அமைப்பு, தாங்கள் கைப்பற்றியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும், கோர்ட்டில் சமர்ப்பித்தது. அந்த ஆதாரங்கள்தான், மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. உறுதி தேசிய புலனாய்வு அமைப்பு அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி, இலங்கையைச் சேர்ந்த இவர்கள், தங்கள் திட்டத்திற்கு உதவும் வகையில், பாகிஸ்தானின் கராச்சியில், ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகள் கடத்துவதில் அனுபவம் வாய்ந்த ஹாஜி சலீம் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். சர்வதேச அளவில், போதை மருந்து கும்பலுடன் நல்ல தொடர் பில் உள்ள ஹாஜி சலீமுக்கு, இந்த குணா என்ற குணசேகரன், பணத்தை அனுப்பியுள்ளார். இதற்கான, ஆவணங்கள், கிரிப்டோ பரிமாற்றம், மொபைல் போன் தரவுகள், நிதி தொடர்பான தகவல்கள் என, டிஜிட்டல் ஆதாரங்கள் அனைத்தையும், குணா மற்றும் அவனது மகன் திலீபன் ஆகியோரிடமிருந்து கைப்பற்றியதாக, தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றை ஆய்வு செய்தபோது, பணப்பரிவர்த்தனை அனைத்தும், ஹவாலா மூலமாக நடந்துள்ளது என்பதையும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், உறுதிபடுத்தியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. -நமது டில்லி நிருபர்-:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

மணிமுருகன்
நவ 12, 2025 23:15

புலிகள் இயக்கத்தை புணரமைக்க தடுப்பு காவல் மையத்தில்கூடியதாக செய்தி சொல்கிறது அப்படி என்றால் தடிப்பு காவல் மையத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது


raja
நவ 13, 2025 10:06

தமிழகத்தில் என்ன நடக்கிறது முதலில் திராவிட திருடர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் பிரிவினைவாத செயல்களை இரும்பு கரம் உண்டு ஒடுக்க வேண்டும்


Madras Madra
நவ 12, 2025 11:44

புலிகள் பெயரை பயன் படுத்தி யார் இதை செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்க வேண்டும்


Rathna
நவ 12, 2025 11:27

புலிகள், சில தமிழக கட்சிகள் உட்பட அமைதி வழி தீவிரவாதிகளிடம் தொடர்பில் இருப்பது அவர்கள் பேட்டியின் மூலம், செயல்களின் மூலம் தெரிகிறது. ஆனால் தமிழக மக்கள் தான் அதை புரிந்து கொள்ள தெரியவில்லை. தங்கள் சந்ததிகள் பாதுகாப்பை கருதி, தமிழர்கள் சீக்கிரம் தெளிந்தால் நல்லது.


ஆரூர் ரங்
நவ 12, 2025 11:07

இலங்கை இஸ்லாமியர்கள் தங்களை எப்போதுமே தமிழர்களாக கூறிக்கொள்வதில்லை. சிங்களவருக்கே நெருக்கமாக இருந்தனர் இப்போதும் உள்ளனர். அதனால்தான் புலிகள் அவர்களை வடமாகாணத்திலிருந்து துரத்திவிட்டனர். ஒரு காலத்தில் இஸ்ரேலிய மொசாத் புலிகளுக்கு பயிற்சியளித்ததால் எந்த முஸ்லிம் இயக்கமும் புலிகளை விரும்புவதில்லை.


Rathna
நவ 12, 2025 12:32

இலங்கைக்கு போலி குரல் குடுக்கும், போலி திராவிடன் இதை அறிந்து கொண்டால் நல்லது.


தஞ்சை மன்னர்
நவ 12, 2025 11:01

இங்கே இருக்கும் ஆர் எஸ் எஸ் போன்ற ஹிந்துத்துவ கும்பலும் ஜெயின் மற்றும் குஜராத்தி மார்வாடி கும்பல் மூலம் தான் இந்தியாவில் ஹவாலா நடக்கிறது அவர்களை ஏன் கைது செய்வது இல்லை


DUBAI- Kovai Kalyana Raman
நவ 12, 2025 12:41

உன் முஸ்லிம் ஆட்கள் தான் ஹவாலா மோசடி ல நம்பர் ஒன்னு ..மத்திய கிழக்கு gulf countries la இருந்து ஹவாலா மோசடி பண்ணுவது உன் ஆட்கள் தான் ..எந்த RSS காரன் ஹவாலா மோசடி பன்றான் ..பொய்க்கும் ஒரு அளவு உண்டு


Senthoora
நவ 12, 2025 09:31

புலிகள் அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாதிகளை, வேறு எவரையும் நம்ப தயாரில்லை, அவர்கள் போதை பொருள் கடத்தி பணம் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் பல டன் கணக்கில் அவர்கள் தங்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் புதைத்து இருக்கு, அதை தேடி இலங்கை இராணுவம் இன்னும் பலஇடங்களை தோண்டி ஏமாறுது, அதைவிட அவர்களின் பல கப்பல்கள் உலகெங்கும் ஓடுது, சீசெல் நாட்டில் 11 விமானங்களும் இருக்கு என்று சொல்லப்படுது, அதைவிட புலம் பெயர் தமிழர்கள் தாராளமாக பணம்கொடுப்பார்கள். ஆனால் இப்போதைக்கு புலிகள் அமைப்பு திரும்ப கட்டமைக்க முயலாது என்பதே உண்மை. இந்த பிடிபட்டவர்கள் தாங்கள் தப்புவத்துக்காக புலிகளுக்காக செய்வதாக யாரையோ காப்பாற்ற முயட்சிக்கிறார்கள், இன்னும் அவர்களை நொங்கினால் உண்மைவரும்.


ASIATIC RAMESH
நவ 12, 2025 09:22

உண்மையிலேயே இந்த தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவை இந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்கவும் ஆதாரங்கள் சேர்க்கவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். அனைத்தையும், கோர்ட்டில் சமர்ப்பித்ததுதான் இதை விசாரிக்கமுடியுமென்றால் எப்படி? இதுபோன்ற விஷயங்களை நீதிமன்றங்கள் எப்படி கையாளவேண்டும்? என்ன சட்டங்களோ பணநாயக மன்னிக்கவும் ஜனநாயக நாடு... என்று எதிர்க்கட்சிகள் கூவுவார்கள்...


duruvasar
நவ 12, 2025 09:05

அயலக பிரிவு அமைப்பாளர், நிர்வாகி செயலாளர் என கட்டமைப்போடு செயல்படும் பொழுது இப்படித்தான் நடக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2025 09:00

புலிகள் அமைப்பை, புனரமைக்கும் திட்டத்தை தடுக்காமல் இருந்தால் எம் அடுத்த தலைமுறையினருக்கு சென்னை கடற்கரையில் அரைமணி நேர உண்ணாவிரதத்தைக் காணும் வாய்ப்பு கிட்டும்.


Kalyanaraman
நவ 12, 2025 07:24

தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் போதை பொருட்களை விற்பது , கடத்துவது இதற்காகத்தானோ.¡


சமீபத்திய செய்தி