உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் ஓய்வு பெறுவதற்காக காத்திருக்கிறீர்களா? மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி

நான் ஓய்வு பெறுவதற்காக காத்திருக்கிறீர்களா? மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“நான் ஓய்வு பெற்ற பின்தான் வழக்கின் விசாரணை நடக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசிடம் காட்டமாக கேள்வி எழுப்பினார்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை பட்டியலிடப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை வேறு தினத்திற்கு ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதை, தலைமை நீதிபதியும் ஏற்றுக்கொண்டு ஒத்திவைத்தார்.இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, “இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராக வேண்டிய தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி வேறு ஒரு முக்கிய வேலையில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்,” என, மீண்டும் கோரிக்கை வைத்தார்.அதைக்கேட்டு அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி கவாய், “நான், நவம்பர் 24ம் தேதி ஓய்வு பெறுகிறேன். அதற்கு பின்தான் இந்த வழக்கைநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா? அப்படி எதுவும் இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறி விடுங்கள். வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்போது இதை விசாரித்து முடிப்பது, எப்போது தீர்ப்பு எழுதி முடிப்பது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என, அதிருப்தியுடன் தெரிவித்தார்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

Rajasekar Jayaraman
நவ 07, 2025 12:40

இவரெ இவர காட்டிக் கொடுத்துக் கொள்கிறார்


Bakthavachalam Srinivasan
நவ 07, 2025 12:27

தலைமை நீதிபதி மீது வருத்தம் இல்லை. ஆனால் அவருடைய சிந்தனை மீது வருத்தம் உண்டு.


கண்ணன்
நவ 07, 2025 11:57

ஆம் ஐயா! இந்நாட்டுக் குடிமக்களின் பெரும்பான்மையோருக்கு உங்கள் மீது நம்பிக்கைஇல்லை அநற்குப்பல காரணங்கள் உள்ளன.


Karuppasamy
நவ 07, 2025 11:24

ஜனாதிபதி கேட்ட கேள்விகளுக்கு ....


ஆரூர் ரங்
நவ 07, 2025 11:18

2 ஜி வழக்கின் அப்பீல் பல ஆண்டுகளாக பெண்டிங். முக்கிய குற்றவாளிகள ஜாலியாக எம்பி களாக வலம் வருகின்றனர். இத்தனைக்கும் முறைகேடு எனக்கூறி எல்லா 2 ஜி லைசென்ஸ்களையும் உங்க சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது உங்களுக்குத் தெரிந்ததுதானே?


ஆரூர் ரங்
நவ 07, 2025 11:12

எந்த அமர்விடம் சென்றால் காரியம் ஜெயிக்கும் நடக்கும் என்ற தகவல சிபில்கல்ப , வல்சின் போன்ற திறமைவாய்ந்த ஜோசியர்களுக்குத்தான் தெரியுமாம்.


MURUGAN krishnan
நவ 07, 2025 11:11

நல்லது மக்கள்வரி பணத்தில் அனுபவித்தது போதும் ....


Murugesan
நவ 07, 2025 11:08

இந்திய நீதித்துறையை சீரழித்த கேடுகெட்ட சுயநலவாதிகள், முதல்ல 50 கோடி நீதிபதியின் கேசை விசாரித்து தீர்ப்பு வழங்க ....


duruvasar
நவ 07, 2025 10:36

புத்தரிடம் நியாயம் கேளுங்கள்.


duruvasar
நவ 07, 2025 10:35

குடியரசு தலைவர் கேட்ட கேள்விகள் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பை வழங்கி மனநிறைவுடன் ஓய்வுபெறுங்கள். இதற்க்கு யார் தடையாக இருகிறார்கள் என தெளிவுபடுத்துங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை